பொது அறிவு



டிப்ஸ்:கணினியில் வேலை செய்கிறீர்களா?

பெரும்பாலான அலுவலகங்களில் பணி நேரம் முழுக்க ஒரு நாற்காலியிலேயே கட்டுண்டு கிடக்க வேண்டியதாகி விடுகிறது. இதனால் தேவையான உடல் உழைப்பு இல்லாமல் போவதால் டென்ஷன், முதுகு வலி, அஜீரண கோளாறு என்று வரிசை கட்டும் பிரச்சினைகள் ஏராளம். இவற்றைச் சரிச்செய்து கொள்ள நமக்கு சில எளிய டிப்ஸ்களை தருகிறார் சென்னையைச் சேர்ந்த ஹோமியோபதி மற்றும் நேச்சுரோபதி டாக்டர் ஜீவா சேகர்.
* காலையில் அலுவலகத்துக்கு வந்து உங்கள் இடத்தில் அமர்ந்ததும், வேலையைத் தொடங்குவதற்கு முன் ஒரு நிமிடம் கண்களை மூடி அமர்ந்து மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு வேலையைத் தொடங்கினால் பிரெஷ்ஷாக உணர்வதுடன், உங்களின் காலை நேரப் பதற்றமும் குறையும்.
* நீங்கள் உபயோகிக்கும் நாற்காலி உங்கள் உடல் வெப்பத்தை வெளியேற்றும் வகையில் துளைகள் உள்ளதாக இருக்க வேண்டும். அவ்வாறு துளைகள் இல்லாத 'குஷன்' நாற்காலிகளைப் பயன்படுத்தினால், ஒரு டர்க்கி டவலை நான்காக மடித்துப் போட்டு அதன் மீது அமருங்கள். சில மணி நேரங்களில் உங்கள் உடலின் வெப்பம் அதில் இறங்கிய பின், அதன் மடிப்பை மாற்றிப் போட்டு அமருங்கள்.
* முதுகை வளைத்து, கூன் போட்டு உட்காராமல், நன்கு நிமிர்ந்து நாற்காலியில் முதுகு படும்படி உட்காருங்கள். கால்களை தரையில் வைப்பதைவிட, சற்று உயரமான ஒரு சப்போர்ட் கொடுத்து வைத்துக் கொண்டால், முதுகுவலி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.
* பல மணி நேரம் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால், தசைப்பிடிப்பு ஏற்படும். எனவே, அவ்வப்போது கை, கால்களை நீட்டி மடக்குவது, தலையை ரிலாக்ஸ்டாக நாலாபுறங்களிலும் சாய்த்துக் கொள்வது போன்ற செயல்களைச் செய்யுங்கள். கூடவே தண்­ணீர் குடிப்பது, முகத்தைக் கழுவுவது, அருகில் சிறிது தூரம் நடந்து விட்டு வருவது... என்று ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை உடலுக்கு ஏதாவது இயக்கம் கொடுங்கள். தினமும் உடற்பயிற்சி செய்யும் பழக்கம் இல்லை என்றால் குனிந்து கைகளால் பாதத்தை தொடுவது, இடுப்பில் கை வைத்துக் கொண்டு பின்புறம் வளைவது, இடது மற்றும் வலது புறம் சாய்வது போன்ற எளிமையான பயிற்சிகளை சில நிமிடங்கள் செய்யுங்கள் (முதுகு மற்றும் இடுப்பு வலி இருப்பவர்கள் மருத்துவரை ஆலோசித்த பிறகே இவற்றைச் செய்ய வேண்டும்). இதனால் உடலில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். தசைப் பிடிப்பும் விலகும்.
* கணினி முன் வேலை செய்யும் போது எப்போதும் ஸ்கிரீனையே பார்த்துக் கொண்டிருப்பதால் தான் கண்களில் எரிச்சல் ஏற்படும். இதைத் தவிர்க்க அயர்ச்சியாகத் தோன்றும் போதெல்லாம் சில விநாடிகள் கண்களை மூடி, அந்தக் கையின் மேல் மற்றொரு கையையும் வைத்து முடிக் கொள்ளுங்கள். இதனால் கண்களுக்கு சில நொடிகள் அடர்ந்த இருட்டுக் கிடைக்கும். இது, அதிக ஒளியினால் ஏற்படும் சோர்வை விலக்கும். தவிர, கண்களை மேலும் கீழுமாக, முன்னும் பின்னுமாக சுழற்றுகிற எளிமையான பயிற்சிகளையும் செய்யலாம். 'ஆன்ட்டி ரேடியேஷன் கிளாஸ்' ஐ கம்ப்யூட்டர் திரையில் பொருத்துவதும் ஒளியினால் கண்கள் எரிச்சலடைவதைத் தடுக்கும்.
* உடல் உழைப்புக் குறைவாக இருப்பதால் மாலை நேர சிற்றுண்டிக்கு எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்ப்பது, அஜீரணக் கோளாறுகளைத் தடுக்கும். அதற்கு பதில் அவல், அவல் புட்டு, பிரெட் சாண்ட்விச், பழக்கலவை, சுண்டல், சன்னா மசாலா, முளை கட்டிய பயிறு, பொரி, மசாலா பொரி, வேர்க்கடலை, பட்டாணி... போன்றவற்றை சாப்பிட்டால் எளிதில் ஜீரணமாவதுடன் அதில் உள்ள வைட்டமின்கள் உடலுக்கும் அதிக சக்தி கொடுக்கும்.
* இரவு வெகு நேரம் தூங்காமல் கண் விழித்து வேலை செய்வதாலும் அஜீரணக் கோளாறு ஏற்படும். இதனால் மறுநாள் காலை மலம் கழிக்க முடியாமல் சிரமப்படுவார்கள். இதைத் தவிர்க்க, மாலை நேரத்தில் நாட்டு சர்க்கரை சேர்த்த அவல் அல்லது காய்ந்த திராட்சை அல்லது பப்பாளிப்பழம் சாப்பிடலாம். கூடவே நிறைய தண்­ணீரும் குடிக்க வேண்டும். இதனால் அஜீரண கோளாறுகள் வெகுவாகக் குறைவதுடன் உடலின் வெப்பநிலையும் சீராக இருக்கும்

கோப்புறைகளுக்கு கடவுச்சொல் கொடுத்து மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து தடுக்க வேண்டுமா?
உங்கள் கோப்புறைகளுக்கு (Folder) ஒன்றை கடவுச்சொல்(password) கொடுத்து மற்றவர்களின் பயன்பாட்டிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா?
அதற்கு இரண்டு வழிகள் தரப்பட்டுள்ளன. Windows operating System க்கு என சில இலவசமாக தரவிறக்கம்(Download) செய்து பயன்படுத்தும் நிரல்களும் உள்ளன.
1. உங்கள் அலுவலகக் கணனியில் உங்களுக்கென பயனர் கணக்குடன்(user Account) கடவுச்சொல் உள்ளதாக இருந்தால், அதன் File System என்.டி.எப்.எஸ்(NTFS) ஆக இருக்கும்.
2. இனி எந்த கோப்புறைக்கு கடவுச்சொல் கொடுக்க வேண்டுமோ, அதன் மீது Right Click செய்திடவும். பின் Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும் அல்லது Alt அழுத்தியவாறே Double Click செய்திடவும்.
3. கிடைக்கும் விண்டோவில் Sharing என்று உள்ள Tab ஐத் தேர்ந்தெடுக்கவும். அதில் Make this Folder Private என்று உள்ளதை தேர்ந்தெடுக்கவும்.
4. பின் Apply என்பதில் சொடுக்கவும். உங்களுடைய கணக்குக்கு கடவுச்சொல் இல்லை என்றால், ஒரு சிறிய பெட்டிச் செய்தி வரும். கடவுச்சொல் ஒன்றை தரப்போகிறீர்களா? என்று கேட்கப்படும். உங்கள் கோப்புறையை நீங்கள் Private ஆக மாற்ற வேண்டும் என்றால் இந்த கடவுச்சொல்லினைக் கட்டாயம் கொடுத்தே ஆகவேண்டும். இவ்வாறு கொடுத்துவிட்டால் பின் கணனியில் உங்கள் கணக்கில் நுழைகையிலும் அதே கடவுச்சொல்லினை கொடுக்க வேண்டியதிருக்கும்.
5. கடவுச்சொல் ஒன்றைக் கொடுத்துப் பின் அதனை உறுதிப்படுத்தவும். பின் Create Password என்பதை அழுத்தி கடவுச்சொல் விண்டோவினை மூடவும்.
6. பின் Properties எனும் Dialog Box இல் OK என அழுத்தவும். இனி உங்கள் கடவுச்சொல் இல்லாமல் இந்த கோப்புறையை யாரும் திறக்க முடியாது.
இரண்டாவதாக ஒரு வழி: இந்த கோப்புறை Zip செய்யப்பட்டிருந்தால் அதற்கு தனியாக கடவுச்சொல் ஒன்றினைக் கொடுக்க முடியாது. இதற்கு Zip செய்யப்பட்ட கோப்புறை மீது இருமுறை அழுத்திடவும். மேலாக உள்ள பட்டியலில்(menu) File தேர்ந்தெடுத்து, பின் Add a Password என்பதில் சொடுக்கவும். கடவுச்சொல் பெட்டியில் கடவுச்சொல் ஒன்றை கொடுக்கவும். மீண்டும் Confirm Password பெட்டியிலும் இதனை கொடுக்கவும். இனி இந்த கோப்புறையை நீங்கள் மட்டுமே கடவுச்சொல் பயன்படுத்திப் பார்க்க முடியும்

  1. வீடியோக்களை எடிட் செய்வதற்கு

வீடியோக்களை எடிட் செய்வதற்கு Daniusoft Video Studio Express என்ற மென்பொருளானது உதவுகிறது.
முதலில் தரவிறக்க சுட்டியை கிளிக் செய்யுங்கள். கிளிக் செய்தவுடன் பேஸ்புக் தளத்திற்கு அழைத்து செல்லப்படுவீர்கள். பேஸ்புக் தளத்தின் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டவும். பின் Like என்னும் பட்டியை கிளிக் செய்யவும்.
கிளிக் செய்தவுடன் முகப்புதிரை விலகும். பின் உங்களுடைய பெயர் மற்றும் ஈ-மெயில் முகவரியை உள்ளிட்டு Get it free now என்ற பொத்தானை அழுத்தவும். பின் உங்களுடைய ஈ-மெயிலுக்கு ஒரு மெயில் அனுப்பபடும்.
அதில் கீ மற்றும் மென்பொருளை பதிவிறக்கம் செய்வதற்கான சுட்டி இரண்டும் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த சுட்டியினை பயன்படுத்தி மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். உங்களுக்கு வந்த ஈ-மெயிலானது Spam மெயிலாக இருக்கும். பின் மென்பொருளை இணையத்தில் இருந்து தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்ளவும்.
இந்த மென்பொருளை பயன்படுத்தி வீடியோவினை எளிமையாக எடிட் செய்து கொள்ள முடியும். இந்த மென்பொருளின் உதவியுடன் வீடியோக்களை iPod, iPhone, iPad  ஆகிய சாதனங்களுக்கு ஏற்றவாறு வீடியோவினை கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.
இந்த மென்பொருளானது விண்டோஸ் 2003, XP, Vista மற்றும் 7 போன்ற இயங்குதளத்தில் வேலை செய்ய கூடியது ஆகும். இந்த மென்பொருளானது பல்வேறு வீடியோ பைல் பார்மெட்களை சப்போர்ட் செய்யக்கூடியது ஆகும்.


உங்கள் புகைப்படைத்தை மிகவும் அழகுபடுத்த வேண்டுமா?

அனைவருக்கும் தங்களது புகைப்படங்கள் மற்றவர்களை கவருவதாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
ஆனால் ஒரு சில படங்கள் அழகு குறைவாக இருக்கும். அப்படிப்பட்ட படங்களை அழகுபடுத்த நாம் போட்டோசாப் போன்ற எதாவது ஒரு மென்பொருளை நாட வேண்டும். ஒரு சிலருக்கு போட்டோசாப் மென்பொருளில் எவ்வாறு பணிபுரிவது என்பது தெரியாது.
அப்படிப்பட்டவர்களுக்கெனவே உள்ளது தான் போட்டோசைன் என்ற மென்பொருள் ஆகும். இந்த மென்பொருள் பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானதாக இருக்கும். நம்முடைய நண்பர்களை செல்போன் மூலமாக படம் எடுத்து வைத்திருப்போம் பின்பகுதி(Background) மோசமான நிலையில் இருக்கும். அப்படிப்பட்ட  புகைப்படங்களை இந்த மென்பொருளின் மூலமாக மெறுகேற்ற முடியும்.
இந்த மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த மென்பொருளானது இரண்டு விதமாக உள்ளது மினி வெர்சனாகவும், மற்றொன்று முழுவதுமாகவும் உள்ளது. மினி வெர்சன் மட்டுமே இலவசமாக பயன்படுத்த முடியும்.
முழு போட்டோசைன் மென்பொருளை பணம் செலுத்தியே பெற வேண்டும். மினிவெர்சனில் வெறும் 237 டெம்ப்ளேட்கள் மட்டுமே உள்ளது. ஆனால் முழு போட்டோசைன் மென்பொருளில் 700 க்கும் மேற்ப்பட்ட டெம்ப்ளேட்கள் உள்ளது.
இந்த மென்பொருளானது போட்டோக்களை அழகுபடுத்த பயன்படுகிறது. ஒன்றுக்கும் மேற்ப்பட்ட புகைப்படங்களை ஒண்றினைக்கவும் இந்த புகைப்படம் உதவுகிறது. நண்பர்களின் குழு புகைப்படத்தையும் இந்த மென்பொருள் மூலமாக உருவாக்க முடியும்.
தரவிறக்க சுட்டி - http://www.picget.net/photoshine-photo-editor/download.html



இணையத்தில் அனைத்து வகை வீடியோக்களையும் வேகமாக தரவிறக்கம் செய்ய

நாம் இணையத்தில் பல எண்ணற்ற வீடியோக்களை பார்த்து மகிழ்கின்றோம். ஒரு சில வீடியோக்களை நாம் பார்க்கும் போது நாம் அதை நம் கணனியில் சேமித்து கொள்ளலாம் என்று தோன்றும்.

இதனை பயன்படுத்த
1. இந்த மென்பொருளை தரவிறக்கியவுடன் உங்களுக்கு வரும் EXE பைலை இரண்டு முறை க்ளிக் செய்து உங்கள் கணனியில் நிறுவி கொள்ளுங்கள்.
2. இப்பொழுது டெஸ்க்டாப்பில் உள்ள சார்ட்கட் பைலை ஓபன் செய்து கொள்ளுங்கள். உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
3. இங்கு நீங்கள் தரவிறக்க வேண்டிய வீடியோவின் URL காப்பி செய்து அங்கு கொடுக்கபட்டிருக்கும் URL என்ற இடத்தில் பேஸ்ட் செய்யவும்.
4. அடுத்த கட்டத்தில் SAVE TO என்ற இடத்தில் உங்கள் வீடியோ சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும்.
5. அடுத்து OUTPUT என்ற இடத்தில் நீங்கள் இந்த வீடியோவின் வகையை(FORMAT) தேர்வு செய்து கொள்ளவும். மாற்றவேண்டாம் என்றால் WITH OUT CONVERSION என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.
6. அடுத்து கீழே உள்ள START என்ற பட்டனை அழுத்தியவுடன் உங்கள் வீடியோ நீங்கள் தேர்வு செய்த இடத்தில் வந்திருக்கும்.
7. அவ்வளவு தான் இந்த முறையை பயன்படுத்தி இணையத்தில் உள்ள வீடியோக்களை எளிதாக தரவிறக்கி கொண்டு நினைத்த நேரத்தில் பார்த்து ரசித்து கொள்ளலாம்.
தரவிறக்க சுட்டி-http://download.cnet.com/3001-2071_4-75033737.html?spi=80e8436317f3f2dd98c17871ab2ee487&part=dl-6254212



கம்பியூட்டர் சில விளக்கச்சொற்கள் (ஆங்கிலம்)


Computer - Common Operation Power Utilizing Techinical ElectronicReader.

PC - Personal Computer.

BIOS - Basic Input Output System

MOUSE - MOst USE full (device)

CD - Compact disck.

CDR - Compact Disck Recordable.

CDRW - Compact disck Rewritable.

CDROM - Compact Disck Read Only Memory

CDRAM - Compact Disck Randem Access Memory

VCD - Video Compact Disck.

DVD - Digital versatile Disck (duetsch) or Digital Video Disck (english)

DVDR - Digital versatile Disck recordable.

DVDE - Digital versatile Disck Erasable

DVDRW - Digital versatile Disck Rewritable

DVDROM - Digital versatile Disck Read Only Memory

DVDRAM - Digital versatile Disck Read Access Memory

CRT - Cathode Ray Tube

LCD - Liquid-crystal Display

TFT - Thin Film Transisiter

CPU - Central Processing Unit

USB - Universal Serial Bus

VIRUS - Very Important Resoures Under Size

WORM - Write Once Read Man

RAM - Read Access Memory

ROM - Read Only Memory

PROM - Programable Rom

EPROM - Erasable Eprom

EEPROM - Electrically EPROM

SRAM - Static Randem Access Memory

PNG - Portable network Graphics

ELX 
- Every ones Linuxs

URL - Universal Resource Locater

HTTP -Hyper text Transfer Protocol

WWW - World Wide Web

3WI - World Wide Web Institute

W3C
 - World Wide Web Consortium

PING -Pocker Inten Net Gopher

POP3 - Post Office protocol Verision -3

PVR 
- Persanol Video Recorder

MP3 - Motion Picture Experts group layer -3

WAV - Microsoft Wav

.RA - Real Audio

WMA -Window Media Audio

WMV - Window media Video

GPRS - General Pocket Radio Service

TPS - Time Per Second

VPN - Virtual Private Network

LAN - Local Area Network

MAN -Metro Politan Area nerwork

WAN - Wided Area network

ISP -Internet Service provider

IVRS - Inter active Voice Responce System

DTMF - Dual Tine Multiple frequency

IDE -Intergrated Drive Electronics

DMA - Direct Memory Access

CBT - Computer Based Tutorial

API - Application programming Interface




தெரிந்து கொள்ளுங்கள்


1.தண்ணீருக்கு அடியில் சென்று ஆராய்ச்சி செய்ய உதவும் மூச்சு கருவியின் பெயர் ஸ்கியூபா ஆகும். [SCUBA--self Cointained Underwater Breathing Apparatus]


2.முதன் முதல் 1893 ம் ஆண்டு நினைவு தபால் தலையை வெளியிட்ட நாடு அமெரிக்கா.


3.தொலைக்காட்சியில் பயன்படுத்தப்படும் மூன்று அடிப்படை நிறங்கள் பச்சை,நீலம்,சிகப்பு


4.பிளாஸ்டிக்குகளை எரிக்கும் பொழுது டையாக்சின் என்ற நச்சுப் புகை வெளியகிறது.


5.சூப்பர் கணனியின் வேகம் வினாடிக்கு ஃலாப்ஸ்ப் (Flops) என்ற அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.


6.பாம்பு நாக்கின் மூலம் வாசனையை உணர்கிறது.


7.காண்டா மிருகத்தின் கொம்புகள் உண்மையில் எலும்புகள் அல்ல.அவை மிகக் கடினமான மயிரிழைகளால் உருவானவை.


8.அனப்லெப்ஸ் என்ற மீனுக்கு இரண்டு கண்களில் நான்கு விழித்திரைகள் உண்டு.


9.கடுமையான வெப்பத்தில் இருந்து பாதுகாத்துக்கொள்ள நீர் யானையின் தோலில் ஒருவித இளஞ்சிகப்பு நிறத்தாலான திரவம் சுரந்து, குளிர்ச்ச்சியை கொடுக்கிறது.


10.உண்ணி எனப்படும் தெள்ளுப்பூச்சி, ஓராண்டு வரையிலும் கூட பனிக்கட்டியினுள் உயிருடன் இருந்து, ஐஸ் கரைந்தபின் வெளிவரும் ஆற்றல் கொண்டது.

சீட் பெல்ட்’ பிறந்தவிதம்!



நவீன வாகனங்களில் பாதுகாப்பை உறுதிசெய்யும் `சீட் பெல்ட்’ முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது விமானங்களில்தான். 19-ம் நூற்றாண்டின் இறுதியில் ஜார்ஜ் கெய்லி என்பவர் சீட் பெல்ட்டை கண்டுபிடித்தார். விமானங்களைத் தொடர்ந்து, இந்த பெல்ட்டுகளை கார்களிலும் பயன்படுத்துவது நல்லது என்று 1920-களில் டாக்டர்கள் பரிந்துரைக்கத் தொடங்கியதை அடுத்து அதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டன. ராணுவ பிளைட் இன்ஸ்பெக்டராக இருந்த எட்வர்ட் ஜெ. ஹாக் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்ட பாதுகாப்பு பெல்ட்டையே போர்டு மோட்டார் கம்பெனி தனது துவக்க கால கார்களில் பயன்படுத்தியது.
1955-ல் `ஸாப்’ கார் தயாரிப்பு நிறுவனம் முதல்முறையாக சீட் பெல்ட்களை காரின் அடிப்படை வசதிகளில் ஒன்றாக ஏற்றுக்கொண்டது. காரின் முன் மற்றும் பின் சீட்டுகளில் இருப்போர் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று முதன்முதலில் கட்டாயமாக உத்தரவிட்டது ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணம்.
வால்வோ நிறுவனம் 1956-ல் `டூ பாயின்ட் கிராஸ் செஸ்ட் டயகனல் பெல்ட்டு’களை அறிமுகப்படுத்தியது. அதையடுத்து 1958-ல் `த்ரீ பாயின்ட் சேப்டி பெல்ட்’கள் அறிமுகமாயின. சுவீடனில் 1959-லும், அமெரிக்காவில் 1963-லும் இந்த த்ரீ பாயின்ட் சேப்டி பெல்ட்கள் புழக்கத்தில் வந்தன.
Categories:

சனிக்கிரகத்தின் வளையங்கள்



சனிக்கிரகத்தைச் சுற்றி அழகான மூன்று வளையங்கள் இருப்பதாகச் சொல்லப்பட்டு வந்தது. அவற்றில் வெளிப்புறம் காணப்படும் இரண்டு வளையங்களும் மிகப் பிரகாசத்துடன் திகழ்கின்றன. இவற்றைத் தாண்டி சனியின் மிக அருகாமையில் காணப்படும் உள் வளையம், அவ்வளவு ஒளியுடையது அல்ல. பிரகாசமான இரண்டு வளையங்களையும் 1610-ம் ஆண்டு கலிலியோ என்ற வானவியல் அறிஞர் தான் கண்டுபிடித்தார். ஆனால், அவருக்கு அதைப்பற்றித் தெரியவில்லை. 1850-ம் ஆண்டு தான் மூன்றாவது வளையம் கண்டுபிடிக்கப்பட்டது.
வளையங்களாகத் தெரிபவை, உண்மையில் வளையங்கள் கிடையாது. முன்பு எப்போதோ சனியைச் சுற்றி வந்த உபகிரகம் ஒன்று, சனியை நெருங்கி வரும்போது உடைந்து துகள்களாகி சனியைச் சுற்றி வருகிறது என்கிறார்கள், விஞ்ஞானிகள். இந்த வளையங்கள் பல்லாயிரக்கணக்கான சிறிய துகள்களால் ஆனவை என்ற கருத்து அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் துகள்கள் எங்கிருந்து வந்தன என்பது மட்டும் மர்மமாகவே உள்ளது.
செயற்கைக்கோளை சனிக்கிரகத்துக்கு ஆராய்ச்சி செய்ய அனுப்பும்போது, செயற்கைக் கோள் அந்த வளையங்களை உடைத்து விடாதா? என்று பலருக்கும் சந்தேகம் தோன்றலாம்.
தற்போதைய ஆய்வுகளின்படி சனியைச் சுற்றி 11 வளையங்கள் இருப்பதாகத் தெரிவிக் கின்றனர், ஆராய்ச்சியாளர்கள். இன்னும் கூட சில வளையங்கள் இருக்கலாம் என்றும் அவர்கள் நம்புகின்றனர். சில வருடங்களுக்கு முன்புகூட புதிதாக இரண்டு வளையங் கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வளையங்கள், பெரும்பாலும் தூசியும், பனித்துகள் களும் நிறைந்தவை.
பயனியர் 2 (1979), வாயேஜர் 1 (1980), வாயேஜர் 2 (1981) ஆகிய விண்கலங்கள் இதுவரை சனிக்கிரகத்துக்குச் சென்றிருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதில் பயனியர் விண்கலம், சனிக்கிரகத்தில் இருந்து சுமார் 20 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் பறந்தது. வாயேஜர் விண்கலங்களும் சனியின் குறிப்பிட்ட தூரத்தில் பறந்து ஆராய்ச்சி செய்துள்ளன.
2004-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தேதியன்று, சனிக்கிரகத்தின் வளையங்களைத் துளைத்துக் கொண்டு ழைந்தது காசினி-ஹைஜீன்ஸ் விண்கலம். 2004-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 25-ந் தேதி ஹைஜீன்சை மட்டும் சனியின் துணைக்கோளான டைட்டனில் இறக்கி விட்டது, காசினி.
காசினி, சனிக்கிரகத்தின் வளையங்களுக்குள் ழைந்ததால், அந்த வளையங்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. காரணம், வளையங்களில் இருப்பவை தூசியும், பனித் துகள்களும் தான். இவை ஒரே இடத்தில் திடப்பொருள் போல இருக்காது. விண்கலம் அவற்றில் மோதினாலும், அவை வளையத்துக்குள்ளேயே வேறொரு இடத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்.
Categories:ள்

மிகச் சிறிய பறவை!



உலகிலேயே மிகச் சிறிய பறவை கிபா நாட்டில் உள்ளது. `மெல்லிஸிகா ஹெலனே’ என்ற தேன்சிட்டுதான் அது. அப்பறவையின் எடை வெறும் 2 கிராம்தான். அலகு முதல் வால் வரை அதன் நீளம் 2 அங்குலம். பெண் பறவையை விட ஆண் பறவை கால் அங்குலம் சிறியது. இந்தக் கணக்குப்படி பார்த்தால் உலகின் மிகச் சிறிய பறவை இதுதான். இதில் ஆண் பறவை வேகமாகச் சிறகுகளை அடிக்கும் தன்மை கொண்டது. அது ஒரு வினாடிக்கு 80 தடவைகள் இறக்கையை அடிக்கும்.    அப்போது `விர்’ என்ற சப்தம் மட்டும் கேட்கும். ஆண் பறவையும், பெண் பறவையும் தனித்தனியாகவே பறக்கும். இவற்றின் இனச்சேர்க்கை சில வினாடிகளில் முடிந்து விடும். இந்த நேரத்தைத் தவிர மற்ற வேளைகளில் ஆணும், பெண்ணும் ஒன்றையொன்று கண்டு கொள்ளாது. இவை சிலந்தியின் வலையைக் கொண்டு மரக்கிளைகளில் மிகச் சிறிய கூடுகளை அமைத்துக்கொள்கின்றன. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பதால் இப்பறவை களுக்கு அடிக்கடி உணவு தேவைப்படும். சிறிய சிலந்திகளும், ஈக்களும்தான் இவற்றின் உணவு. ஆனால் இதற்கு மிகவும் பிடித்த உணவு பூந்தேன்தான். எனவே மலர்களைத் தேடி இவை எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் சளைக்காமல் பறக்கும்.

பார்க்க முடியாத கிரகம்



சூரியக்குடும்பத்தில் உள்ள புதனைத்தான் `பார்க்க முடியாத கிரகம்’ என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர். ஆங்கிலத்தில் `மெர்குரி’ என்று அழைக்கப்படும் புதன், சூரியனுக்கு அடுத்ததாக அமைந்துள்ளது. புதன் குறித்த சில அடிப்படைத் தகவல்களைப் பார்ப்போம்…
* பூமியின் விட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு தான், புதனின் விட்டம். அதேபோல பூமியின் மொத்த எடையில் 5.5 சதவீதம் தான் புதனின் எடை.
* சூரியனை மிக வேகமாகச் சுற்றி வரும் புதன், சூரியனில் இருந்து சுமார் 5.8 கோடி கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.
* நம்முடைய நாள் (24 மணி நேரம்) கணக்குப்படி 88 நாட்களில் சூரியனைச் சுற்றி வருகிறது, புதன். அதாவது, புதனில் ஒரு வருடம் என்பது நமக்கு 88 நாட்களாகும்.
* புதன், தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 55 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. * மெர்குரி என்பது, ரோம் நாட்டிலுள்ள `சந்தனத்தால் ஆன இறக்கைகளைக் கொண்ட தேவதூதனின்’ பெயராகும். * இந்தக் கிரகம் சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால், சூரிய ஒளியின் பிரகாசத்துக்கு நடுவே இதைக் காண்பது கடினம். பொதுவாக சூரிய உதயத்திற்கு ஒருமணி நேரத்திற்கு முன்பும், சூரிய அஸ்தமனத்திற்கு ஒருமணி நேரத்திற்குப் பின்பும் தான் இதைப் பார்க்க முடியும். அதையும் எப்போதாவது தான் பார்க்க முடியும். எனவே, புதனைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
* புதனுக்கு மிக மெல்லிய வளிமண்டலம் இருக்கிறது. இந்த வளிமண்டலம், சோடியம், பொட்டாசியம், ஹீலியம் மற்றும் ஹைட்ரஜனால் ஆனது. * பகல் நேரத்தில் 427 டிகிரி செல்சியஸ் வெப்பமும், இரவு நேரத்தில் 173 டிகிரி செல்சியஸ் வெப்பமும் புதனில் காணப்படும்.
Categories:ள்

யானைகள்!




நிலத்தில் வாழும் விலங்குகளில் மிகப் பெரியது யானைதான். அதிலும் ஆப்பிரிக்க யானைகள் ஆசிய யானைகளை விடப் பெரியவை. ஆப்பிரிக்க யானை சராசரியாக 4 மீட்டர் உயரம் வளரும். 3 ஆயிரத்து 600 கிலோ எடை இருக்கும். ஒரு நாளைக்கு 270 கிலோ உணவும், சுமார் 200 லிட்டர் தண்ணீரும் பருகும். பெண் யானை கருத்தரித்து 22 மாதங்கள் கழித்து குட்டி போடும். காட்டு யானைகள் மார்ச் முதல் மே மாதத்துக்குள் குட்டி போடுகின்றன. பொதுவாக 20 முதல் 50 யானைகள் கூட்டமாக வாழ்கின்றன. ஒவ்வொரு கூட்டத்துக்கும் ஒரு தலைவனும் உண்டு.    யானைக்குட்டிகள் 5 ஆண்டுகள் வரை தாயின் பாலைக் குடித்தே வளர்கின்றன. தாயை விட்டுக் குட்டி பிரிவதே இல்லை. குட்டி தனது வாயால்தான் பால் குடிக்கும். தும்பிக்கையால் அல்ல. பிறக்கும்போது குட்டி 90 முதல் 135 கிலோ வரை எடை இருக்கும். யானை எப்போதும் ஒரே பாதையில்தான் போய் வரும். யானைகள் 90 முதல் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்கின்றன. சில யானைகளின் தந்தங்கள் 5 மீட்டர் நீளமும், 90 கிலோ எடையும் இருக்கும். யானை நீரில் நன்றாக நீந்தும். 4.5 மீட்டர் ஆழத்தில் நீந்திச் செல்லும். மனிதனால் தண்ணீரில் எவ்வளவு நேரம் மூச்சை அடக்கி இருக்க முடியுமோ அவ்வளவு நேரம் யானையாலும் நீருக்கடியில் இருக்க முடியும். யானை சுவாசிப்பது தும்பிக்கையால் என்றாலும், வாசனையை அறிவது வாயால்தான். வாயில்தான் அதற்கு வாசனை அறியும் நரம்புகள் இருக்கின்றன.

நுண்ணோக்கியும், தொலைநோக்கியும்!



1590-ல் ஆலந்து கண்ணாடிக் கடைக்காரர் ஜாகாரியாஸ் ஜான்சென், சிறிய பொருட்களைப் பெரிதுபடுத்திக் காட்டும் நுண்ணோக்கியை (மைக்ராஸ்கோப்) கண்டுபிடித்தார்.
கலிலியோ, பூச்சிகளின் கண்ணைப் பரிசோதிக்க நுண்ணோக்கி போன்ற ஒரு கருவியைப் பயன்படுத்தியிருக்கிறார். 17-ம் நூற்றாண்டின் மத்தியில் ஆலந்து நாட்டு கண்ணாடிப் பொருள் தயாரிப்பாளர் அண்டன் லீவென்குக், பாக்டீரியாவையே ஆராயும் அளவுக்கு நுண்ணோக்கியை மேம்படுத்தினார். ஜான்சென் உருவாக்கியதை விடச் சிறப்பான லென்ஸ்களை அவர் பயன்படுத்தினார்.    அதே காலகட்டத்தில் பிரிட்டீஷ் விஞ்ஞானி ராபர்ட் ஹூக், `மைக்ரோகிராபியா’ என்ற நூலை வெளியிட்டார். அதில், நுண்ணோக்கி மூலம் பார்க்கும்போது சிறிய பொருட்கள் எவ்வாறு காட்சியளிக்கும் என்று தெளிவாக வரையப்பட்டிருந்தது. அதன் பின்னரே மைக்ராஸ்கோப் பிரபலமானது. நுண் உயிரியல், மருத்துவ ஆராய்ச்சி ஆகியவை வளர நுண்ணோக்கி கண்டுபிடிப்பே காரணம்.
தொலைவில் உள்ளவற்றைப் பெரிதாக்கிப் பக்கத்தில் பார்க்க உதவுவது தொலைநோக்கி (டெலஸ்கோப்). 1608-ம் ஆண்டு ஹான்ஸ் லிப்பர்ஷே என்ற ஆலந்து நாட்டுக்காரர் முதன்முதலில் தொலை நோக்கியை உருவாக்கினார். 1609-ல் இதை முதலில் பயன்படுத்தியவர் கலிலியோ. பிரதிபலிக்கும் தொலைநோக்கியும், பைனாக்குலரும் அதையடுத்து வந்தன. 18-ம் நூற்றாண்டில் கண்ணாடி அணிவதற்குப் பதிலாக சிறிய தொலைநோக்கியைத் தூக்கித் திரிவது சிலரின் வழக்கமாக இருந்தது.
Categories:ள்

இரவில் தனிமையில் இருந்தால் திக்…திக்…

நவம்பர் 29, 2010vayalமறுமொழியவும்
இருட்டிற்குள் கொஞ்ச தூரம் செல்லவும் திக்…திக்… காரணம் உள்ளூர ஊறிவிட்ட பயம் தான். பேய் என்றொரு விசித்திரம். இருக்கிறதா, இல்லையா? என்று விடை தெரியாததால் ஒட்டிக் கொண்ட பயம் அது.
உருவம் உண்டு, உருவம் கிடையாது. இருட்டுக்குள் இருக்கும், மரத்தில் ஆடும். மனிதனைப் போல உருவமிருக்கும். அதன் வழியில் குறுக்கிட்டால் ஒரே அடியில் உயிரைக் குடித்துவிடும். இப்படி ஆளாளுக்கு சொல்லி வைக்க, தொற்றிக் கொண்ட பயம்தான் பேய் பயம்.
***
பட்டிக்காட்டான், பகுத்தறிவாளன், ஆராய்ச்சியாளர்கள் ஒவ்வொருவரும் பேய் பற்றிய சிந்தனையில் வேறுபடுகிறார்கள். பேய் பற்றிய குறிப்புகள் ஆன்மிக நூல்களிலும் காணப்படுகிறது. சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பேய் பற்றி பேசப்பட்டு வருகிறது.
மனோதத்துவ விஞ்ஞானிகள் (1890-ல்) சொசைட்டி பார் சைஜிக்கல் ரிசர்ச் (எஸ்.பி.ஆர்.) என்ற அமைப்பை தொடங்கி ஆவிகளைப் பற்றிய தகவல்களைப் பதிவு செய்து நேரடி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவி ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன.
***
ஆவி உலக ஆராய்ச்சியின் முன்னோடியாக கருதப்படும் ஜி.என்.எம்.டைரல் என்பவர் 4 வகை பேய்கள் உண்டு என்கிறார். 1.உயிரோடு இருப்பவர்களின் ஆவி. ஒருவர் உயிரோடு இருக்கும்போதே அவருடைய ஆவி வேறு எங்கோ வசிக்கும் ஒருவர் முன் தோன்றுவது. 2. ஆபத்து நேர ஆவிகள். நமக்கு நன்கு தெரிந்தவர், அவருக்கு ஆபத்தான தருணத்தில் (இறப்பு அல்லது விபத்தின்போது) நம் முன் தோன்றுவது. 3. இயல்பான ஆவிகள். இறந்த ஒருவருடைய ஆவி எப்போதாவது தோன்றுவது. 4. நீண்டகால ஆவிகள். பழைய கோட்டைகள், பாழடைந்த வீடுகளில் பல ஆண்டுகளாக வசிப்பவை இந்த வகை ஆவிகள்.
***
ஆவி உலகில் மீடியமாக செயல்படும் பெண்கள் ஏராளம். ஆவி ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களில் முக்கியமான பெண் ஆய்வாளர் பாய்ன். ஆவிகளில் நல்லவை, கெட்டவை, சாது, முரடானவை உண்டு என்கிறார் இவர். அவை மனிதர்களை தாக்கும், உதவும், கண்டுகொள்ளாமலும் செல்லும் என்பது இவருடைய கருத்து. பேய் அடித்து யாரும் சாவதில்லை. பேயைப் பார்த்த பயத்தில் செத்தவர்கள்தான் ஏராளம் என்கிறார் பாய்ன். பேயைப் பார்த்து பயப்படாமல், `ச்சீ போய்விடு’ என்று அலட்சியப்படுத்தினால் அவை போய்விடும் என்று பேய் விரட்ட டிப்ஸ் தருகிறார் இவர்.
***
வீட்லிகேரிங்டன் ஆவி ஆராய்ச்சியில் புகழ் பெற்றவர். “உடலில் உள்ள செல்கள் போலவே மனதுக்கும் செல்கள் உண்டு. அவை சைகான்கள் எனப்படும். நாம் ஆழமாக ஒரு விஷயத்தை எண்ணும்போது சைகான்கள் சம்பந்தப்பட்ட இடத்தில் உருவமாகத் தோன்றும். அதுதான் ஆவி” என்று இவர் விளக்கம் அளித்தார். இது ஒரு புதுமையான விளக்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும், எல்லோரது எண்ணங்களும் அப்படி உருவத்தை ஏற்படுத்தும் என்பதை மெய்ப்பிக்க முடியாததால் அது ஒரு தியரியாக மட்டுமே இருந்து வருகிறது.
***
ஆவி ஆய்வாளர் மையர்ஸ் இன்னொரு முறையில் விளக்கம் தருகிறார். டெலிபதி (தொலைவில் உணர்தல்) எண்ணங்கள்தான் ஆவிக்கு காரணம் என்கிறார் இவர். ஒருவர் ஆபத்தான நேரத்தில் யாரையாவது பார்க்கவோ, உதவி கோரவோ நினைத்தால் அவரது எண்ணங்கள் `டெலிபதி’ முறையில் சம்பந்தப்பட்டவரை சென்றடையும். அப்போது அவர் முன்பு பாதிக்கப்பட்டவரின் உருவமும் தோன்றும். அதுதான் ஆவி என்கிறார் மையர்ஸ். இதற்கு அவர் சில உதாரணங்களைக் கூறி விளக்கினார். இந்தக் கருத்துக்களை விஞ்ஞானிகள் ஓரளவு ஏற்றுக்கொள்கிறார்கள்.
***
ஆவிகளுக்கு உடல் இல்லாமல் எப்படி உருவம் ஏற்படும்? தோன்றும் முன்பாக அவை எங்கே குடியிருக்கின்றன? என்பவை பேய் மறுப்பாளர்கள் எழுப்பும் முக்கிய கேள்விகள்.
இறந்தவரின் ஆன்மா ஆவியாக உருப்பெற்று அலைகிறது என்றால் இறப்பின் மர்மங்களை அவை மனிதனுக்கு விளக்க முடியுமே? ஒரு இடத்தில் இருக்கும் எந்த மனிதரையும் கவனிக்காமல் தான் பாட்டுக்கு கடந்து செல்கிறதே அவற்றுக்கு புத்திசாலித்தனம் கிடையாதா? உருவமற்ற அவை உடை அணிந்து தோன்றுமாமே? அவற்றுக்கு எதற்கு உடை? அவை எப்படி அணியும்? இவையும் அவர்களின் கேள்விகள்.
***
ஆவிகளை நம்பாத ஆய்வாளர்கள், எல்லா கூற்றுகளையுமே மறுக்கிறார்கள். எல்லாம் பிரமை என்கிறார்கள். வழிவழியாக கடத்தப்படும் கற்பனைகள் பிரமை உருவத்தை தோற்றுவிக்கக்கூடும் அல்லது தவறாக புரிந்துகொள்ளப்படும் என்பது அவர்களின் கருத்து. கேமரா கண்டுபிடிக்கப்பட்ட பிறகு ஆவி ஆராய்ச்சி சூடுபிடித்தது. நவீன ஸ்கேனர்கள், கதிர்வீச்சுக் கேமரா, பேய்களுக்கென்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட `ஸ்பைடர்’ கருவி என அறிவியல் நவீனங்கள் கொண்டு ஆய்வாளர்கள் ஆவிகளைத் தேடுகிறார்கள். ஆனால் இதுவரை ஆவிகள் சிக்கவில்லை. அவை எழுப்பும் பீதியும் குறையவில்லை.
Categories:ள்

இயற்பியல் நோபல் பரிசு -2010



இயற்பியல் சம்பந்தப்பட்ட கண்டுபிடிப்புக்காக 2010-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் ஆந்தரே கெய்ம், கொன்சிட்டான்டின் நோவோசியெலோவ் ஆகிய இரண்டுபேருக்கு வழங்கப்படுகிறது. இந்த இருவரும் ரஷ்யாவில் பிறந்து தற்போது பிரிட்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களாக பணியாற்றுகின்றனர். ஒற்றையணு தடிப்புள்ள கரிம அணுப் படலத்தை பற்றிய இருவருடைய ஆய்வுக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது. பல அதிசயத்தக்க பண்புகளை உள்ளடக்கியது இவர்கள் உருவாக்கியுள்ள கிராஃபீன். இது எதிர்காலத்தில் பல்வேறு சாதனைகளுக்கு அடித்தளமிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் தட்டையான வடிவில் கிராஃபீனை உருவாக்கியிருக்கிறார்கள். தாமிரத்துக்கு நிகராக மின்கடத்தும் திறன் உடையது. மேலும் வெப்பத்தையும் எளிதில் கடத்தும் தன்மை உடையது. குவாண்டம் இயற்பியல் துறை சார்ந்தது இந்தக் கண்டுபிடிப்பு. ஹீலியம் வாயுக் கூட ஊடுருவ முடியாத வகையில் மிகவும் அடர்த்திமிக்கது. சாதாரண பென்சில்களில் உள்ள கிராபைட் கார்பனிலிருந்து கிராஃபீனை தமது அயராத கடும் உழைப்பு, அர்ப்பணிப்பு மூலமாக இருவரும் உருவாக்கியுள்ளனர். மின்னணுவியல் துறையில் இந்தக் கண்டுபிடிப்பு பல புதுமைகளுக்கு வழி செய்யும் என்று எதிர்பார்க்கலாம். சோலார் (சூரிய) பேட்டரிகள் உருவாக்கவும் இது பயன்பட வாய்ப்பு உள்ளது. மேலும் பிளாஸ்டிக்குடன் இதை சேர்த்து புதுவகை மின் கடத்தியாக பயன்படுத்தலாம். மெல்லிய தாகவும், மீட்சித்தன்மை உடையதாகவும் லேசான எடை கொண்டதாகவும் இருப்பதால் எதிர்காலத்தில் செயற்கைக்கோள்கள், விமானங்கள், கார்கள் தயாரிப்பில் கிராஃபீன் கலப்புப் பொருள்கள் பயன்படுத்தப்படும்.
கார்பன் பல்வேறு தன்மைகளில் நுழையும் தன்மையுடையது. கார்பனின் பொது வகை கிராபைட், இது கார்பனின் அறுகோண வடிவமைப்பை (hexagonal Structure) கொண்டது. இதன் உயர் அழுத்தத்தின் கீழ் வைரம் உருவாகிறது. புதிய மாலிக்குலர் முறையானது புல்லர்னஸ் (Fullernes) என்று அழைக்கப்படுகிறது. இதில் முக்கியமானவை சி60, என்றழைக்கப்படும். இது 60 கார்பன் அணுக்களை கொண்டுள்ளது. இது பார்ப்பதற்கு கால்பந்து போல் காணப்படுகிறது. இது 20 ஹெக்சகனல் மற்றும் 12 பெண்டகானை கொண்டு வட்டம் போல் உருவாக்குகிறது. இந்த புல்லர்னஸ் கண்டுபிடிப்பு 1996-இல் வேதியியலில் நோபல் பரிசை வென்றது.
குவாசி-ஒன்-வட்ட வடிவ கார்பன் முறை, கார்பன் நானோ குழாய்கள் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆனால் ஒற்றை நானோ குழாய்கள் 1993-ம் ஆண்டு முதல் பயன்பாட்டுக்கு வந்தன. இந்த ஒற்றை நானோ குழாய்கள் கிராஃபீனோடு பல வகைகளில் ஒத்துப்போகின்றன. இதில் தெரிவது என்னவெனில் கிராபைட் எக்ளோசலை கார்பன் ஷீட்களை ஒன்றன் மேல் ஒன்றாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் நாம் புரிந்து கொள்வது என்னவென்றால் இந்த ஒற்றை ஷீட் முறையை அதே முறையில் தயாரிக்க முடியாது. ஆனால் 2004-இல் இரண்டு விஞ்ஞானிகள் இந்த முறையை கிராஃபீன் மூலம் பயன்படுத்த முடியும் என்பதை நிரூபித்து காட்டினார்கள். கிராஃபீன் போன்ற வேதிப்பொருள்கள் 1960-களிலேயே அறியப்பட்டாலும் அதனோடு ஒற்றை லேயர்களை இணைப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் கிராஃபீனோடு இணைந்து அதன் மூலம் 2டி செயல்பாடுகளை கண்காணிப்பதில் ஆண்ட்ரீ கெய்ம், கொன்சிட்டான்டின் நோவோ சியெலோவ் ஆகிய இந்த 2 விஞ்ஞானிகளும், அவர்களுடைய குழுவும் வெற்றி பெற்றனர்.
கிராஃபீன் என்றால் என்ன?
கிராஃபீனின் எலக்ட்ரானிக் உபகரணம் ஒரு ஒற்றை லேயர் கார்பன் அடைக்கப்பட்ட அறுகோணம் (தேன் ஆடை) எனப்படும். இது மூன்று வட்ட சதுர பொருள்களில் இருந்து மாறுபட்டது. கிராஃபீன் மின் தொடர்பு மிகவும் குறைவானதாகும்.
ஆனால் இந்த பொருள்களின் அடர்த்தி பூஜ்யம். ஆனால் இதனுடைய பெர்மி அளவு (Fermi Level) மின்கடத்தியால் மாற்ற இயலும். இதன் மூலம் அந்த மின்பொருள்கள் (n-doped) அல்லது p-doped சார்ந்திருக்கும். கிராஃபீனையும் இதனுடன் செலுத்த இயலும். (எ.கா.) தண்ணீர் அல்லது அமோனியா அதன் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும். டோப்ட் (doped) கிராஃபீன் மின்னாற்றல் மிகவும் சக்தி வாய்ந்தது.
இதன் உருவாக்கம் 2004-ஆம் ஆண்டுக்கு முன்னர் கிராஃபீனின் ஸ்டேபிள் ஷீட்ஸ் பற்றி யாரும் யோசிக்கவில்லை. இதனால்தான் ஆந்தரே கெய்ம், கொன்சிட்டான்டின் இருவரும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றதும் அவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டது. அவர்கள் இருவரும் அறிவியலில் தங்களது விளக்கத்தை 2004-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிட்டனர். அவர்கள் சாதாரண, ஆனால் சக்தி வாய்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கிராபைட்டை, கிராபைட் கிரிஸ்டல் டேப்புடன் இணைத்து பிறகு அதை சிலிக்கானுக்கு மாற்றினர். இந்த முறை முதலில் ஆர்.ரெப்ஸ் குழுவினரால் அங்கீகரிக்கப்பட்டு அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள். ஆனால் அவர்களால் அதன் மோனோலேயர்சை அடையாளம் காண முடியவில்லை. மான்செஸ்டரை சேர்ந்த விஞ்ஞானிகள் குழு ஒற்றை லேயரால் செய்யப்பட்ட பிளேக்சை அடையாளம் காண முடிந்தது. (எ.கா.) கிராஃபீன் பிறகு அவர்கள் கிராஃபீனை ஹால்பாருடன் சேர்த்து அதற்கு மின்சார இணைப்பை தந்தனர். இந்த வகையில் அவர்கள் longitudinal ரெசிடென்ஸ் மற்றும் ஹால் ரெசிடென்சை மதிப்பிட முடிந்தது. கிராஃபீனுடன் புதிய தொழில்நுட்பத்தை இணைக்கும் முறைகள் கண்டுபிடிக்கப்பட்டவுடன், மான்செஸ்டர் குழுவும், வேறு குழுக்களும் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கினர்.
இதன் ஒரு பகுதியாக ஓர் அணு தடிமன் கொண்ட, மிக மெலிந்த, கரிமப் படத்தாள்கள் உருவாக்கப்பட்டன. இதற்கிடையே டபிள்யூ. ஏ. பீ. ஹீர் ஜார்ஜியா டெக்னாலஜியை சேர்ந்த விஞ்ஞானியான இவர் சிலிக்கான் கார்பனேட்டிலிருந்து (Sic) சிலிக்கானை எரிய வைக்க ஆய்வு மேற்கொண்டார். கொலம்பியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த பி.சிம் தலைமையிலான குழு மெல்லிய கரிமப் படலத்தை உருவாக்கியது குறித்து ஆய்வு மேற்கொண்டது. அவர்கள் கிராபிட் கிரிஸ்டலை ஏவுகணையில் முனையில் வைத்து சோதனை மேற்கொண்டனர். இந்த முறையில் அவர்களால் 10 கிராஃபீன் லேயர்களை உருவாக்க முடிந்தது.
இதன்மூலம் இது பெரிய அளவிலான கரிமப் படத்தாள்களை கிராஃபீனிலும் செய்யலாம். தொழிற் சாலைகளில் 70 செ.மீ நீளமுள்ள பெரிய ஷீட்டுக்கள் உருவாக்கப்படுகின்றன. கிராஃபீன் ஒரு கடத்தி மாற்றியாக இருந்தாலும் இதன் மூலம் தொடுதிரை, டார்ச் விளக்குகள், சோலார் செல்களை உருவாக்கலாம். செயற்கைக்கோள்களிலும், விமானங்களிலும் இதனைப் பயன்படுத்தலாம். குவாண்டம் இயற்பியல் துறை சார்ந்த இந்த அரிய கண்டுபிடிப்பு பல துறைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

வேதியியல் துறை நோபல் பரிசு-2010



வேதியியல் துறை சார்ந்த கண்டுபிடிப்புக்காக 2010-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு கூட்டாக வழங்கப்படுகிறது. ரிச்சர்டு எப். ஹெக். இவர் ஓர் அமெரிக்க வேதியியல் அறிஞர். டெலவேர் பல்கலைக்கழகத்தில் பணிசெய்து ஓய்வு பெற்றவர். ஜப்பானைச் சேர்ந்த விஞ்ஞானி நெகிஷி. இவர் பர்டியூ பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். ஜப்பானின் அகிரா சுஸுகி. இவர் ஒக்கைடோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். இந்த மூவருக்கும் கரிம வேதியியல் (Organic Chemistry) சார்ந்த கண்டுபிடிப்புக்காக நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
கார்பன் அணுக்களை பல்லேடியத்தை வினை ஊக்கியாகக் கொண்டு பிணைக்கச் செய்வதற்கான வழிமுறையை இம்மூவரும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். இந்தக் கண்டுபிடிப்பு புற்றுநோய் சிகிச்சைக்கான புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்கவும், பல்வேறு புரட்சிகர பயன்பாடுகளுக்கு உதவும் பிளாஸ்டிக்குகளை உருவாக்கவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கல்வித்துறை, தொழில்துறை ஆராய்ச்சி மருந்துகள், விவசாய வேதியியல் பொருள்கள், உயர் தொழில்நுட்ப பொருள்கள் சம்பந்தபட்ட நுண்ணிய இரசாயனப் பொருள்கள் உற்பத்திக்கு இவர்கள் கண்டுபிடிப்பு உன்னத பங்காற்றுகிறது. இவர்களது கண்டுபிடிப்பு மூலம் புற்றுநோய், ஹெர்பஸ் வைரஸ் தாக்குதல், எய்ட்ஸ் சிகிச்சைக் கான மருந்துகள் மற்றும் கம்ப் யூட்டருக்கான மிக மெல்லிய   திரைகள் போன்ற நுகர் வோருக்கான பயன்பாட்டு பொருள்களை உருவாக்க வழி கிடைத்துள்ளது.
கரிமவேதியியலிலில் மிகவும் கடினமானது ரசாயன மாற்றம், கரி-கரி சேர்க்கைதான். கரி உள்ள இரண்டு மூலக் கூறுகளை அப்படியே சேர்த்தால், அவை சேராது. கரியும் கரியும் ஒருங்கிணைந்து ஒட்டிக்கொள்ளாது. ஆனால், இவ்வகைச் சேர்க்கைகளே பல புதிய ரசாயனங்களைத் தோற்றுவிக்க வல்லவை என்று விஞ்ஞானிகள் அறிந் திருந்தனர். இவ்வகைக் கரி-கரி சேர்க்கையை எளிமையாகச் செய்யும் வழியை இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிலிருந்தே பலர் ஆராய்ந்து வந்தனர். கரி-கரி சேர்க்கையை நிகழ்த்துவதற்கு சென்ற நூற்றாண்டில் நான்கு ரசாயன மாற்றங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இந்த நான்கும், கண்டுபிடித்த வர்களுக்கு நோபல் பரிசை ஈட்டித் தந்துள்ளன. விக்டர் க்ரிக்னார்ட் (Victor Grignard)  1912, டீய்ஸ் மற்றும் ஆல்டர் (Otto Deis and Kurt Alder)  1950, பிரவுன் மற்றும் விட்டிக் (Herbert C. Brown and Georg Wittig)  1979 ஆகியோர் ஏற்கெனவே நோபல் பரிசுகளை வாங்கியிருந்தனர். இப்போது 2010-இல் ரிச்சர்ட் ஹெக், ஐ-இச்சி நெகிஷி, அகிரா சுஸூகி  (Richard Heck, Eiichi Negishi and Akira Suzuki)  ஆகியோர் வாங்கியுள்ளனர். நெகிஷி, ஹெக்கின் மாற்றத்தைச் சற்று மாற்றியமைத்து, புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கினார். ஹெக்குடன் தொடர்பின்றி அமெரிக்காவின் சிரக்யூஸ் பல்கலைக்கழகத்தில் தனியாக இதைச் செய்தார். இதை வைத்து 1977-இல் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். பின்னர் பர்ட்யூ பல்கலைக் கழகத்துக்கு இடம்பெயர்ந்தார். நோபல் பரிசு வாங்குவதுதான் இவரது வாழ்வின் லட்சியமாக இருந்ததாம். நிறைவேற்றிவிட்டார்.
அகிரா சுஸூகி, ஜப்பானின் ஹொக்கைடோ பல்கலைக்கழகத்தில் பணியாற்றுகிறார். இவர், தன் பங்குக்கு, 1979-இல் எழுதிய கட்டுரை யில், பல்லேடியம் தவிர வேறு சில உலோகங் களைக் கொண்டும் கரி-கரி சேர்க்கையை நிகழ்த் தலாம் என்று நிறுவினார். ஹெக் முதலானோர் கண்டது கரி- கரி சேர்க்கைக்கு ஒரு சமயோசிதமான வழி. நேரடியாகச் சேர்க்க முற்படாமல், பல்லேடியம் போன்ற புதியதோர் உலோகத்தை ரசாயன மாற்றங்களை நிகழ்த்த உதவியாக கேட்டலிஸ்ட் (தூண்டி) எனச் சேர்த் தனர். இவை கரி உள்ள தாய் மூலக்கூறுகளை சரியான வழியில் பிரித்து, கரி-கரி சேர்க்கையை ஏதுவாக்கும். ஹெக், நெகிஷி முதலானோ ரின் இவ்வகைக் கண்டு பிடிப்பால், ஆர்கனோ மெட்டாலிக்ஸ் என்ற புதிய கரிம வேதியியல் துறையே உருவாகியது.
இப்படி நிகழ்த்தப்படும் கரி-கரி சேர்க்கையால் நமக்கு என்ன பயன்? ஸ்டைரோஃபோம் கோப்பைகளை உபயோகித் திருப்பீர்கள். இந்த ஸ்டைரோஃபோமின் மூலப்பொருளான ஸ்டைரீன் எனும் ரசாயனத்தை கரி-கரி சேர்க்கை மூலம்தான் செய்கிறார்கள்.
அதேபோல, ஆர்கானிக் எல்.ஈ.டி  (Organic LED) எனப்படும் ஒளிர்வான்களில் உள்ள இரசாயனங்களும் இந்த கரி-கரி சேர்க்கையாலேயே உண்டாக்கப்படுகின்றன. அடுத்து மருந்துப்பொருட்கள். வலிலி நிவாரணி களான மார்ஃபீன், நெப்ராக்சின் போன்ற பொருள்களை கரி-கரி சேர்க்கை வழியாகவே செய்கிறார்கள். மாண்டலுக்காஸ்ட் எனப்படும் ஆஸ்துமா மருந்துகளும் இவ்வாறே தயாரிக் கப்படுகிறது.. முக்கியமாக, நுரையீரல், வயிறு, கழுத்து, தலை மற்றும் மார்பகப் புற்றுநோயை எதிர்க் கவல்ல மருந்தான டாக்ஸால் (Taxol) எனும் கீமோதெரபி மருந்தை உருவாக்கும் முறை இதே வழிதான். டாக்ஸால் இயற்கை யாகக் கிடைக்கக் கூடியதே. ஆனால் செடி களிலிலிருந்து இதைப் பிரித்தெடுப்பது சிரமம். செலவும் கூடுதல். இதனால் சோதனைச் சாலையிலேயே எளிமையான ரசாயனங் களைக் கூட்டிச் சேர்த்து, டாக்ஸாலை உண்டாக்குகிறார்கள். ஹெக் பரிந்துரைத்த பல்லேடியம் காட்டலிஸ்ட் வைத்து கரி-கரி சேர்க்கை உண்டாக்கும் ரசாயன மாற்றத்தின் வழியாக, இதைப் போலவே டிராக்மாசிடின் (Dragmacidin)  எனும் மருந்து கடல் பாசியிலிலிருந்து பிரித் தெடுக்கப்படுகிறது. இது, பல நோய் வைரஸ்களுக்கு எதிர்வினை என்பதை விட முக்கியமாக, தற்போது எய்ட்ஸ் வைரஸ் களுக்கே எதிர் வினையாக இருக் கக்கூடும் என்று பரிசோதித்திருக்கின்றனர் (மனிதர் களுக்குக் கொடுத்து இன்னமும் சோதிக்க வில்லை). இந்த மருந்தையும், ஹெக் பரிந்துரைத்த பல்லேடி யம் காட்டஸ்ட் வைத்து கரி-கரி சேர்கை உண்டாக்கும் ரசாயன மாற்றத்தின் வழியாக, செயற்கையாக உருவாக்க முடியுமாம்.
Categories:

மருத்துவத் திற்கான நோபல் பரிசு-2010

பிரிட்டிஷ் மருத்துவ விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸ் 2010-ஆம் ஆண்டுக்கான மருத்துவத் திற்கான நோபல் பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார். சோதனைக் குழாய் மூலம் குழந்தை களை பிறக்கச் செய்யும் முறையை மேம்படுத்திய தற்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. விஞ்ஞானி ராபர்ட் எட்வர்ட்ஸின் முயற்சியால் 1978 ஜூலை 25-இல் பிரிட்டனில் முதல் முறையாக சோதனைக் குழாய் குழந்தை பிறந்தது.
1950-ஆம் ஆண்டுகளுக்கு முன் கருப்பைக்கு வெளியே கருவை உருவாக்கிப் பின்னர் கருப்பைக்குள் செலுத்தும் முறை இருந்தது. இதை ராபர்ட் எட்வர்ட்ஸ், பேட்ரிக் ஸ்டீப்போ என்ற சக விஞ்ஞானியுடன் சேர்ந்து மேம்படுத்தினார்.
அவரது இந்த சிகிச்சை முறைக்கு இன்விட்ரோ ஃபெட்டிலைசேஸன் (ஐவிஎஃப்) என்று பெயர். ராபர்ட்ஸின் பங்களிப்பால் உலகம் முழுவதும் குழந்தை பாக்கியம் இல்லாத லட்சக்கணக்கான தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் சுமார் 40 லட்சம் குழந்தைகள் சோதனைக் குழாய் மூலம் பிறந்துள்ளனர். அவரது முயற்சி நவீன மருத்துவ உலகில் ஒரு மைல்கல் ஆகும்.
ராபர்ட்  ஜி.எட்வர்ட்ஸ் 1925-இல் பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் பிறந்தார். ராணுவத்தில் பணியாற்றிய அவர் 2-ஆம் உலகப் போர் முடிவடைந்த பின்னர், வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உயிரியல் படித்தார். தொடர்ந்து ஸ்காட்லாந்தில் எடின்பெர்க் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். 1955-இல் பி.எச்.டி படிப்பை நிறைவு செய்தார். தொடர்ந்து 1958 முதல் லண்டன் தேசிய மருத்துவ ஆய்வுக் கழகத்தில் விஞ்ஞானியாக பணியாற்றினார். 1963-ஆம் ஆண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக்த்தில் பணியில் சேர்ந்து அங்கு பல மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டார். இங்குதான் தனது இன்விட்ரோ ஃபெர்டிலைசேஸன் (ஐவிஎஃப்) (சோதனைக் குழாய் குழந்தை) ஆய்வை மேற்கொண்டார். அங்கு உலகின் முதல் ஐவிஎஃப் ஆய்வு மையமும் அமைக்கப்பட்டது. அங்கு சக விஞ்ஞானி பேட்ரிக் ஸ்டீப்போவுடன் இணைந்து சோதனை குழாய் குழந்தை ஆய்வை வெற்றிகரமாக நிறைவு செய்தார். இப்போது 85 வயதான நிலையிலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்தச் சோதனை குழாய் மூலம் குழந்தைகளை உருவாக்கும் முறை முதலில் விலங்கு களிடம் சோதனை செய்யப்பட்டது. (எ.கா.) கடல் வாழ் உயிரினங்கள். வார்செஸ்டர் அமைப்பைச் சேர்ந்த கிரகரி பின்சால் என்ற அமெரிக்க விஞ்ஞானி 1935-ஆம் ஆண்டு முதல் முதலாக முயல்களை வைத்து இந்த ஆய்வை மேற்கொண்டார். மின் ஷீ சாங் என்ற மற்றொரு விஞ்ஞானி 1959-ஆம் ஆண்டு இந்தச் சோதனையை உறுதி செய்தார். 20-ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில் மறு உருவாக்கலை பற்றி ஆய்வு மேற்கொண்ட விஞ்ஞானிகள், இதை மனிதர்கள் வாயிலாகப் பரிசோதனை செய்ய ஏற்ற சூழ்நிலை குறித்து விவாதித்தனர். இதன் காரணமாக 1960 வரை இந்தச் சோதனை குழாய் குழந்தைமுறை அங்கீகரிக்கப்படவில்லை. இதற்கு நிறைய தொழில்நுட்ப வசதிகளும் அதற்குரிய ஆராய்ச்சிக் கூடங்களும் தேவைப்பட்டன. பிறகு சோதனை முறையில் கருமுட்டைகள் தாயின் கருப்பையில் சேர்க்கப்பட்டன. 1950 களில் லண்டனில் உள்ள நேஷனல் மருத்துவ ஆராய்ச்சி கழகத்தில் பணிபுரிந்த எட்வர்ட்ஸ் இந்த துறையில் விரிவான ஆராய்ச்சிகளை நடத்தியவர். தனது முதல் சோதனையை அவர் 1965-இல் வெற்றிகரமாக செய்து முடித்தார். அவரது அடுத்த கட்ட முயற்சி மிகவும் சவாலானது. பெண்ணின் கருப்பையில் விந்துணுக்கள் செலுத்தப்பட்டால் அவை நீண்ட நாட்கள் தங்குமா என்பது. பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளின் முடிவில் 1969-ஆம் ஆண்டு இதில் வெற்றி கண்டார். டாக்டர் எட்வர்ட்ஸ் மனித அணுக்கள் விட்ரோவினுள் செலுத் தப்பட்டதும் அவை 2-செல் ஸ்டேஜில் சேரவில்லை. இந்த தோல்வியினால் விட்ரோ அணுக்கள் உடம்பின் வெளி பகுதியில் வைத்து சோதனை செய்யப்பட்டது. இந்த புதிய முயற்சியின் மூலம் ஓரளவிற்கு வெற்றி கிடைத்தது. இதில் நிருபிக்கப்பட்டது என்ன வென்றால் கோனாடிராபின்ஸ் (Gonotrophins)   மூலம் ஓக்டஸ் கட்டுப்படுத்தப்படும். மேலும் விட்ரோவில் இதை செயல்படுத்த நீண்ட காலமானது. இருந்த போதிலும் டாக்டர் எட்வர்ட்ஸ் அவர் இந்த ஆய்வின்போது புதிய தொழில்நுட்ப ரீதியான பிரச் சிûனையை சந்தித்தார். அவரது புதிய ஆய்வின்படி மனித உடலினுள் ஒக்டஸை செலுத்தினால் குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல் அது பயனளிக்கவில்லை. இங்குதான் டாக்டர். பேட்ரிக் சி.ஸ்டெப்போஸின் முறை பயனளித்தது. பிறகு இங்கிலாந்திலேயே லேப்ரஸ்கோப் முறையை உருவாக்கினார். அதன் மூலம் ஓவரிலிருந்து (Ovary) ஒக்டோஸை செலுத்தினார். லேப்ராஸ்கோப் முறையில் கருவுற்ற பெண்களுக்கு வயிற்றின் அடிப்பகுதியில் எண்டாஸ்கோப் என்னும் நவீன மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. உடனே டாக்டர் எட்வர்ட்ஸ் இந்த முறை எல்லோருக்கும் பயனளிக்கும் வகையில் உள்ளது மேலும் இதன் வாயிலாக மீயாசிஸ் ஒஒவை ஒவரி யிலிருந்து கோனாடிராபின்ஸில் இணைக்கலாம் என முடிவு செய்தார்.
எட்வர்ட்ஸின் இரண்டாம் கட்ட ஆய்வில் இதுவே இறுதியான கண்டுபிடிப்பு ஆகும். முதல் கட்ட ஆய்வில் விட்ரோ முறையில் செலுத்தப்பட்ட விந்துக்கள் எம்பிரயோ முறை மூலம் 2-செல் ஸ்டேஜ்ஜுடன் ஒத்து போனது. இதை தொடர்ந்து 1971-இல் மனித ஒக்டோஸை விட்ரோவுடன் செலுத்தி 16-செல் என்னும் முறையில் பிளாஸ்டோசைட்டை உருவாகச் செய்தார். இந்த ஆராய்ச்சியானது 1969-71 ஒயஎ ஆராய்ச்சியில் ஒரு மைல் கல்லாகும். இது எட்வர்ட்ஸ் அடுத்த கட்ட ஆய்வுக்கு தயாராக அது மிகவும் பயனுள்ள தாக இருந்தது. 1970-இல் சக விஞ்ஞானி பேட்ரிக் ஸ்டீப்போவுடன் இணைந்து (சோதனை குழாய் குழந்தை) ஆய்வை மேற்கொண்டார். இறுதியாக ஹார்மோன்சிகிச்சையில் சில மாறுதல்கள் செய்ததன் மூலம் முதல் கருத்தரிப்பு முறை 1976-ஆம் ஆண்டு வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. பல்வேறு ஆய்வு மற்றும் சோதனைகளுக்கு பிறகு 1978-ஆம் ஆண்டு முதல் சோதனை குழாய் குழந்தைலூயிஸ் ஜாய் பிரவுன் பிறந்ததாக எட்வர்ட்சும், பேட்ரிக்கும் அறிவித்தனர்.
இந்தக் குழந்தை நல்ல உடல் எடை மற்றும் உடல் ஆரோக்கியத்துடன் பிறந்ததாகவும் அவர்கள் கூறினர். அவர்கள் தெரிவித்த லூயிஸ் ஜாய் பிரவுன் போல சோதனை குழாய் மூலம் பிறந்த லட்சக்கணக்கான குழந்தைகள் இன்று நல்ல உடல் ஆரோக்கியத்துடன் உள்ளனர்.


குழந்தையை கண்டிப்புடனும், செல்லமாகவும் வளருங்கள்!




குழந்தை பிறந்த சில நாட்களுக்கு தாய்க்கும், குழந்தைக்கும் அமைதியும், அதிகமான ஓய்வும் தேவை. குழந்தை தினமும் 23 மணி நேரம் தூங்க வேண்டும். தாயும் அதிக நேரம் தூங்க வேண்டும். அந்த நேரத்தில் சத்தமில்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. குழந்தை பிறந்ததும் உறவினர்கள் பார்க்க வந்து தாய் மற்றும் குழந்தைக்கு தொந்தரவு கொடுக்காமல் சில நாட்கள் கழித்து குழந்தையை பார்த்து கொஞ்சுவதே மிகவும் நல்லது. குழந்தை பிறந்த சில நாட்களுக்கு மற்றவர்கள் தூக்கி கொஞ்சாமல் இருப்பது சுத்தமானது… சுகாதாரமானது!
குழந்தைக்கு ரோல்மாடலே பெற்றோர்கள்தான். அவர்கள் தங்கள் கடமைகளை சரியான நேரத்தில், ஒழுங்காக செய்தாலே குழந்தைகளும் அதை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இரவு 12 மணி வரை டிவி பார்ப்பது, காலையில் தாமதமாக எழுவது, அடிக்கடி ஓட்டலில் சாப்பிடுவது போன்ற பெற்றோரின் பழக்கங்கள் குழந்தைகளிடம் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும். குழந்தைகள் படிக்கும்போது பெற்றோர்கள் டிவி பார்ப்பதையோ, வெளியே செல்வதையோ அல்லது யாரிடமாவது ஜாலியாக பேசுவதையோ தவிர்ப்பது நல்லது.
குழந்தைக்கு சேலை மற்றும் இதர துணிகளால் தொட்டில் கட்டுவது கூடாது. இதனால் குழந்தைக்கு பல தீமைகள் ஏற்படும். குழந்தை தன் விருப்பத்திற்கு கை, கால்களை ஆட்டவும், புரண்டு படுக்கவும் முடியாது. தன் நெஞ்சு மற்றும் உடம்பை குறுக்கிக் கொண்டு தூங்க வேண்டிய சூழல் ஏற்படும். காற்றோட்டமும் குறையும். இதனால் குழந்தைக்கு மார்பில் மூக்கடைப்பும், சளியும் ஏற்படும். மேலும் தொட்டிலில் தூங்கும் குழந்தைகள் அடிக்கடி விழித்துக் கொள்ளும். இதனால் தாய்க்கும் தூக்கம் கெடும்.
‘ஊட்டி வளர்த்த பிள்ளை உருப்படாது’ என்பது பழமொழி. சாப்பிடுவதற்கு குழந்தைகள் அடம் பிடித்தால் ஊட்டுவதை நிறுத்துங்கள். சாப்பாட்டைக் கண்டால் ஒரு வெறுப்புணர்ச்சி ஏற்படும்படி செய்ய வேண்டாம். சாப்பாடு வேண்டும் என்று குழந்தை கேட்கும் வரை கண்டுகொள்ளாமல் பொறுமையாக இருக்கவும். வீட்டில் உள்ள மற்றவர்கள் சாப்பிடும் போது குழந்தைக்கும் சாப்பாடு வைத்து மற்றவர்களை பார்த்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தவும். நாளடைவில் குழந்தைக்கு நல்ல சாப்பாட்டு பழக்கத்தை இது உருவாக்கும்.
குழந்தைகளை மற்ற குழந்தையுடன் ஒப்பிட வேண்டாம். ஒப்பீடு செய்வது பெற்றோர்கள் செய்யும் மிகப் பெரிய தவறு. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதத்தில் மற்ற குழந்தையை மிஞ்சித் தான் இருப்பார்கள். பெற்றோர்களின் ஊக்குவிப்பினால் குழந்தைக்கு தன்னம்பிக்கை அதிகமாக வேண்டும், மேலும் நீங்கள் கொடுக்கும் பயிற்சியால் குழந்தை மிகவும் திறமைசாலியாக மாறும் சூழல் ஏற்படும். ஆரம்பத்தில் தோல்வி கண்டாலும் ஊக்குவித்தால் குழந்தைகள் முயற்சி செய்து வெற்றி அடைவார்கள்.
குழந்தையை மிகுந்த கண்டிப்புடன் வளர்ப்பது தவறு. கண்டிப்பு இல்லாமல் மிகுந்த செல்லத்துடன் வளர்ப்பதும் தவறு. குழந்தையை கண்டிப்புடனும், செல்லமாகவும் வளர்க்க வேண்டும். கண்டிப்புடன் வளர்க்கும் பெற்றோரை குழந்தைகள் நேசிக்காமல் பயப்படுவார்கள். கண்டிக்காமல் செல்லம் கொடுத்து வளர்த்தால், குழந்தை பெற்றோரை தாம் நினைத்ததைச் செய்யும் அடிமை என்று நினைத்து விடுவார்கள். இதனால் அந்தக் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கப்படும்.
அடம் பிடிக்கும் குழந்தையிடம் எக்காரணம் கொண்டும் பெற்றோர்கள் அடிபணியக் கூடாது. தொடர்ந்து குழந்தை அடம் செய்ய ஆரம்பித்தால், அலறினால் யாரும் கண்டு கொள்ள வேண்டாம். குழந்தையை அடிக்கவோ, அதட்டவோ, கட்டாயப்படுத்தவோ வேண்டாம். இது கஷ்டம்தான் என்றாலும் பொறுமையாக பெற்றோர் இருந்தாலே, அடம் செய்தால் நமக்கு எதுவும் கிடைக்காது என்பதை குழந்தைகள் புரிந்து கொள்வார்கள். பின்னர் அமைதியாக இருக்கும்போது பொறுமையாக எடுத்துச் சொல்லி புரிய வைக்கவும்.
Categories:பு

மூளை நலமே நமது வாழ்க்கை நலம்

பெப்ரவரி 17, 2011vayalமறுமொழியவும்
மூளை நலமே நமது வாழ்க்கை நலம் என்றால் மிகையில்லை. ஒருவர் அறிஞர் ஆவதும், கலைஞர் ஆவதும், கயவர் ஆவதும் அவரது மூளையின் செயல்பாடுகளை அடிப்படையாக வைத்துதான். மூளை ஆராய்ச்சி சமீப காலமாகத்தான் விரிவடைய ஆரம்பித்திருக்கின்றன. இருந்தாலும் அதன்மூலம் கண்டுபிடிக்கப்பட்ட வியப்பூட்டும் விஷயங்கள் ஏராளம். ஒருவர் சிரிப்பதற்கு மூளையின் எந்த செல்கள் வேலை செய்கின்றன… பொறாமை எண்ணம் எங்கே உதிக்கிறது… கொலை எண்ணத்தால் மூளை எப்படி கொதிக்கிறது என்பது போன்ற விஷயங்கள் வெளியாகத் தொடங்கின.
***
1985-ம் ஆண்டு எம்.ஆர்.ஐ. (மேக்னடிக் ரெசோனன்ஸ் இமேஜிங்) ஸ்கேனர் கண்டுபிடிக்கப்பட்ட பிறகுதான் மூளை ஆராய்ச்சி வேகம் பிடித்தது. அதற்கு முன்புவரை இறந்தவர்களின் மூளையை சோதனை செய்தே சில முடிவுகளை வெளியிட்டனர். பல விஷயங்கள் கங்களாக இருக்கும். இப்போதெல்லாம் ஒருவரை இருக்கையில் அமர வைத்து அவரது மூளை செயல்படுவதை அவரே பார்க்கும் வகையில் விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது. ஸ்கேனர், மரபணு ஆய்வுகள் மூளை பற்றிய பல உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளன.
***
மூளைக்கு ஒரு சிறப்புத்தன்மை இருக்கிறது. மூளை அதன் வெளிப்புறச் சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொண்டு தன்னை வடிவமைத்துக் கொள்கிறதாம். அதாவது பார்வை ஒளி, மொழி (ஒலி), மணம், தசைக்கட்டுப்பாடு மற்றும் காரணம் அறிதல் போன்ற தூண்டுதல் உணர்வுகளால் மூளையின் நிரான் செல்கள் புதுவடிவம் பெறுகின்றன. ஐம்புலன்களின் உணர்வுகளையும் புறச்சூழலில் இருந்து துளித்துளியாக ஏற்றுக்கொண்டு உணர்வு மண்டலத்தில் சேர்த்து மூளை தானாகவே புதிய பரிமாணத்திற்கு மாறுகிறது.
***
கர்ப்பப்பையில் சில நிரான் செல்கள் வளர்ந்து ஒருங்கிணைந்து மூளை உருவாகிறது. சில மாதங்களில் கருவிற்கு 20 ஆயிரம் கோடி நிரான்கள் உருவாகி மூளையாகிறது. இவை வளரும்போதே மற்ற உறுப்புகளோடு தொடர்பு கொள்கிறது. 12 வயது வரை மூளை வளர்ச்சி துரிதமாக நடப்பதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்தப்பருவ குழந்தைகளே புதிய விஷயங்களை எளிமையாகக் கற்றுக்கொள்வார்கள். 4 வயது வரை மொழி, காட்சி, மனப்பான்மை, கற்கும் ஆர்வத்திற்கான மூளைக்களம் துல்லியமாக செயல்படுகிறது. அதன் பிறகு அறிவுப் பலகணி மூடிக்கொள்கிறது. பிறகு கட்டமைப்பு நிறைவடைந்து செயல்பாடுகளே தொடர்கிறது.
***
உணர்வுகளால் மூளையில் அனேக மாற்றங்கள் நிகழும். அதனால் வாழ்க்கையும் மாறக்கூடும். அதாவது தாயானவள் தன் குழந்தையிடம் கொஞ்சிப் பேசி மகிழ்விக்க வேண்டும். இதனால் குழந்தையின் மொழி அறிவும், பேச்சுத்திறனும் வளர்ச்சி அடைகின்றன. இவ்வாறு பழகாவிட்டால் குழந்தை மந்தமானதாக இருக்கும். வளர்ந்த பிறகும் கற்கும் திறன் குறைந்துவிடும். இதேபோல பல காட்சிகளை காட்டி ஊக்கப்படுத்தினால்தான் காட்சி சார்ந்த பகுதி சிறப்பாக இயங்கும். இல்லாவிட்டால் காட்சிப் பணி நிரான்கள் வேறு பணிக்கு தானாக மாறிவிடும்.
***
இளம் பருவத்தில் மன அழுத்தம், மனத்துயர் மற்றும் வன்முறை நிகழ்வுகள் போன்ற சுற்றுச்சூழல் தீங்குகள் மூளையில் ஏற்படுத்தும் விளைவுகளால் குழந்தைகள் வன்மையானவர்களாக வளரும் சூழல் ஏற்படுகிறது. அதேபோல கர்ப்பிணி தொடர்ந்து மன அழுத்தச் சீர்கேட்டுக்கு ஆளானால் அவளது கருவில் வளரும் குழந்தையின் மூளையில் பதட்டம், தவிப்பு போன்ற மன எழுச்சிப் பண்புகள் உருவாகிவிடுகின்றன. இந்தப் பண்புகளை குழந்தை பிறந்தபின் தாயின் அன்பும், சீரான வளர்ப்பு முறையும் ஓரளவுக்கு மாற்றுகின்றன. தொடர்ந்து மோசமான சூழல் இருந்தால் குழந்தை வன் குணத்துடனே வளரும்.

மற்றவர்களின் நோயைக் குறைக்கமுடியும் உங்களால் !



பொதுவாகவே, ஆஸ்பத்திரியில் உடல்நிலை சரியாக இல்லாத போது, உடல்நலம் முன்னேற்றம் அடைந்து, படுத்த படுக்கையாக இருக்கும்போது, தம்மைப் பார்த்துப்பேசி, தனக்குக் குணம் அடைய, தமது உறவினர்களோ அல்லது நண்பர்களோ வரமாட்டார்களா என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்ப்பது இயற்கை.
அவர்கள் கூறும் நம்பிக்கையான உரையாடலால் நமக்கு நாமே உடல்நிலை முன்னேற்றமடைந்துவிட்டமாதிரி நமக்கு உற்சாகமோ சந்தோஷமோ உண்டாவது உண்மை.
படுத்த படுக்கையாக இருப்பவர்களையோ ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருப்பவர்களையோ நாம் காணச் செல்லும்போது நமக்கு நாமே சில வழிமுறைகளை அனுசரிப்பது நல்லது. அதுதான் சிறந்ததும் கூட.
* முதன்முதலில் குறிப்பிட்ட ஆஸ்பத்திரியின் விசிட்டிங் வேளை எப்போது என்பதைக் கண்டிப்பாகத் தெரிந்துகொள்ள வேண்டும்.
* போவதற்கு முன்பாக, உங்களுக்கு உடல்நிலை ஓரளவு திருப்தியாக இருக்க வேண்டும். ஏனென்றால் நோயாளி, ஆஸ்பத்திரிச் சூழ்நிலையில் இருப்பதால், உங்கள் உடல்நிலை சிறிதளவாவது பாதிக்கப்பட்டு இருந்தால், நோயாளிக்கு அதே பிரச்சினை வரக்கூடும். அதுமட்டுமல்ல ; அதே மாதிரி குழப்பம் அருகில் உள்ள நோயாளிக்கும் வரக்கூடும்.
* நீங்கள் பார்க்க இருக்கும் நோயாளி எந்த வார்டு எந்த அறை படுக்கை நம்பர் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
தாங்கள் பார்க்கும்போது நோயாளி தூங்கிக்கொண்டு இருந்தாலோ அல்லது டாக்டர் அந்த நோயாளியைப் பரிசோதித்துக் கொண்டு இருந்தாலோ, தொந்தரவு செய்யாமல் வெளியே வந்துவிடவும். அல்லது வெளியே விசிட்டர் ரூமிற்கு வந்து அங்குள்ள புத்தகம், பத்திரிகை முதலியவற்றைப் படித்துப் பொறுமையாகக் காத்துக்கொண்டு இருக்க வேண்டும்.
வரவேற்று அறையில் வளவளவென்று எதுவுமே பேசாமல் இருப்பது நல்லது.
* வெறும் கையோடு போகக்கூடாது என்றால் பழங்களோ அல்லது ஏதாவது பரிசோ தவிர, படிக்கும் நாவல், புத்தகம் எடுத்துச் சென்றால் நோயாளி சந்தோஷம் அடைவார். குறிப்பாக வீட்டில் செய்த உணவுப் பொருட்கள் அல்லது ஹோட்டலில் செய்த பண்டங்கள் தவிர்க்கவும். பிஸ்கட், பிரட், நன்றாகப் பரிசோதனை செய்த பின் கிடைக்கும் சீல் வைத்த குடிதண்ணீர் சிறந்தது. மொபைல் எடுத்துப்போகக் கூடாது.
* நோயாளியை ஆஸ்பத்திரியில் சேர்த்தவுடன் அவருக்கு அவசியம் நிம்மதி தேவை. அவரோடு குடும்பச் சண்டை அல்லது குடும்பப் பிரச்சினை முதலியவைகளை விவாதிப்பது நல்லதல்ல. கூடுமானவரை சப்தம் போடாமல் இருப்பது நல்லது. குறிப்பாக, பக்கத்துப் படுக்கையில் வேறு நோயாளி தூங்கிக்கொண்டு இருந்தால் வார்த்தையில் மிகவும் கவனம் ÷வை.
* அவ்வப்போது அவரது உடல்நிலை பற்றி அவரைப் பரிசோதனை செய்யும் டாக்டர் அல்லது நர்சோடு எதுவும் விசாரிக்க வேண்டாம். குழப்பம் அதிகமாகும். நோயாளிக்கு நம்பிக்கை தேவை.
* கட்டில் அருகே உள்ள டிரிப் ஷீட்டில் படிக்க வேண்டாம். உங்களுக்கும் உடல்நிலை, ஜூரம் பற்றி ஒரளவு தெரிந்திருக்கும். அதற்காக டாக்டர் குறிப்பிட்ட நோய் அதன் முன்னேற்றம், குறைபற்றி நீங்களாகவே எதுவுமே தெரியாமல் முடிவு செய்யக் கூடாது. டாக்டருக்கு உங்களைவிட அதிகம் தெரியும்.
* நோயாளி ஏதாவது விரக்தியாகப் பேச நேரிட்டால் நம்பிக்கையான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும். போதும்.
* நோயாளியைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது நாம் யாரை சந்தித்தாலும் நமது உறவினருக்கு அவரைப் பற்றிய நல்லதைத்தான் கூற வேண்டும்.
Categories:ள்

வயிற்றுக்கு ஓய்வு கொடுங்கள்!



பிறப்புலேர்ந்து இறப்பு வரைக்கும் எல்லாருக்கும், எந்த வயதுலயும் வரக்கூடிய பிரச்சினை வயிற்றுப்போக்கு. இது பாதிச்ச அனுபவம் எல்லாருக்கும் இருக்கும். சாப்பிடற உணவு ஜீரணிக்கப்பட்ட பிறகு, சிறுகுடலால உறிஞ்சப்பட்டு, மீதி பெருங்குடலுக்குத் தள்ளப்படுது. சில சமயத்துல சிறுகுடல்லேர்ந்து உறிஞ்சப்படாம, அப்படியே பெருங் குடலுக்குத் தள்ளப்படும். அதோட பாக்டீரியா தொற்றும் சேர்ந்துதான் வயிற்றுப்போக்கை உண்டாக்குது. வயிற்றுப்போக்குக்கான காரணங்கள் நிறைய….
ஊரு விட்டு ஊரு, இல்லைனா நாடு விட்டு நாடு போறவங்களுக்கு, இது சகஜம். ஆரோக்கியமில்லாத சாப்பாடு, சமைக்காத உணவு, கை, கால்களை சரியா கழுவாததுன்னு இதுக்குப் பல காரணங்கள். சின்னக் குழந்தைகளுக்கு வரக்கூடிய வயிற்றுப்போக்குக்கு இன்ஃபெக்ஷனோ, பால் அலர்ஜியோ காரணமா இருக்கலாம். குழந்தைகளுக்கு பேதியாகிறப்ப அலட்சியம் கூடாது. 23 தடவை போனாலே என்னனு கவனிக்கணும்.
வயித்தைக் காயப் போட்டாலே இந்தப் பிரச்சினை சரியாயிடும்ங்கிறது பலரோட நம்பிக்கை. அது ரொம்ப தப்பு. வயித்துக்கு ஓய்வே கொடுக்கக் கூடாது. ரத்தம் கெட்டியாகிறது, உடம்புல உள்ள நீர்ச்சத்தெல்லாம் வறண்டு போகிறது, மயக்கம்னு அதோட பின் விளைவுகள் பயங்கரமா இருக்கும்.
வயிற்றுக்போக்கை அதிகப்படுத்தற உணவுகள்னு சிலதைச் சொல்லலாம். பீன்ஸ், வெங்காயம், முட்டைக்கோஸ், சுண்டல், முழு தானிய உணவுகள், பழங்கள், காய்கறிகள், பால், ஜூஸ், பாட்டில் பானங்கள், காபி இதெல்லாம் அந்த ரகம்.
பேதியைக் கட்டுப்படுத்தற உணவுகள்னு பார்த்தா அரிசி, நெய் ஜவ்வரிசி, ஆரோரூட்ல செய்த கஞ்சி, வெந்தயம், நீர்மோர், கேரட், உருளைக்கிழங்குன்னு நிறைய இருக்கு.
வயிற்றுப்போக்கு வந்தவங்க, அதிக நார்ச்சத்து உணவுகளைத் தவிர்க்கணும். அரிசி நொய், ஜவ்வரிசி, ஆரோரூட் மாவுல தளர்வா, கொஞ்சமா உப்பு சேர்த்த கஞ்சியை அடிக்கடி கொஞ்சமா, ஒவ்வொரு டீஸ்பூனா ஒரு நிமிஷம் எடுத்து விழுங்கறது நல்லது. காபி குடிக்கிறது உடம்புல உள்ள நீர்ச்சத்தை அழிச்சிடும். ஓரளவு கெட்டியான சூப் குடிக்கலாம். பெரியவங்களுக்கு பேதியானா, நீர்மோர்ல வெந்தயப் பொடி சேர்த்துக் குடிக்கலாம்.
தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கும் பேதியாகலாம். அதுக்காக தாய்ப்பால் கொடுக்கிறதை நிறுத்தக் கூடாது. பவுடர் பால் கொடுக்கிற குழந்தைகளுக்கு, அதை மாத்தின உடனே, சரியா ஜீரணமாகாம போகலாம். குழந்தையோட உடல்வாகு, அதோட செரிமானத் திறன் எல்லாம் பார்த்து, டாக்டரோட அட்வைஸ் படி புது உணவை ஆரம்பிக்கிறது நல்லது. கஞ்சியா இருந்தா, குழந்தைகளுக்கு வடிகட்டியும், பெரியவங்களுக்கு அப்படியேவும் கொடுக்கலாம்.
ஆரஞ்சு, சாத்துக்குடி ஜூஸ் நல்லது. மத்தபடி ஆப்பிள், பேரிக்காய், பச்சை திராட்சை தவிர்க்கப்படணும். சாக்லெட் கூடாது. அதுல உள்ள ‘சார்பிட்டால்’ என்ற செயற்கை இனிப்பு, பிரச்சினையை இன்னும் தீவிரப்படுத்தும். அதிக இனிப்பு, அதிக உப்பு ரெண்டுமே தவிர்க்கப்படணும்.
Categories:ம்

பிள்ளைகள் படிப்புக்கு இரட்டிப்பு செலவு: பெற்றோரின் அறியாமை



மத்திய அரசின் பல்வேறு வரிகள் மீது, கல்விக்கான, “செஸ்’ கட்டணம் வசூலிக்கப்படுவதால், இந்த தலைமுறை பெற்றோர், தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க முன்வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

அரசு பள்ளி மாணவர்களும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கல்வி பெற, தமிழக அரசு சமச்சீர் கல்வி பாடத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், சந்திரயான் திட்ட இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை என, அரசு பள்ளிகளில் படித்து வாழ்வில் சாதித்தோர் நம் நாட்டில் ஏராளம்.10ம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வில் மாநில அளவில் சாதிப்போர் பட்டியலில், மாநகராட்சி பள்ளி மாணவர்களும் இடம்பிடித்துக் கொண்டு தான் உள்ளனர். ஆனால், இன்றும் நம் சமூகத்தில், நடுத்தர மற்றும் கீழ்த்தட்டு வர்க்கத்தினர் கூட தங்கள் பிள்ளைகளை, “கான்வென்ட்’ பள்ளிகளில் படிக்க வைக்கத் தான் விரும்புகின்றனர்.சென்னை போன்ற பெருநகரங்களில் சில தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க, விண்ணப்பம் வழங்கப்படும் குறிப்பிட்ட நாளின் முதல்நாள் இரவே, அப்பள்ளிகளின் வாசலில் தவம் கிடக்கவும் பெற்றோர் தயாராக உள்ளனர்.

பார்த்ததும் கவர்ந்திழுக்கும் சூழல், தங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிரதான பங்கு வகிக்கும் ஆங்கிலத்தில் பயிற்சி போன்ற காரணங்களால், தனியார் பள்ளிகளுக்கு பெற்றோர் முன்னுரிமை தருகின்றனர்.தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு நிர்ணயித்த கல்வி கட்டணம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தனியார் பள்ளிகளின் நிர்வாகத்தைக் கண்டித்து, சென்னை உள்ளிட்ட இடங்களில், அவ்வப்போது பெற்றோர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதிலும் பலர், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருதி, பள்ளி நிர்வாகத்தை பகைத்துக் கொள்ள விரும்பாமல் மவுனம் காக்கின்றனர். இப்படி, தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களின் கல்விக்காக அரசுக்கு கட்டணம் செலுத்துகிறோம் என்ற நிகழ்கால உண்மையை பெற்றோர் உணராமல் இருப்பது, அவர்களின் அறியாமையை காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் சாடுகின்றனர்.

வருமான வரி, கலால் வரி, சேவை வரி, சுங்க வரி ஆகிய மத்திய அரசின் வரி இனங்களின் மீது, 2005 – 06ம் நிதியாண்டு முதல் பள்ளிக் கல்விக்காக 2 சதவீதமும், 2008 – 09 நிதியாண்டு முதல் உயர்கல்விக்காக 1 சதவீதமும் செஸ் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.உதாரணமாக, 23 ரூபாய் சேவை வரி விதிக்கப்படும் ஒருவரின் மொபைல் போன் பில்லுக்கு, 69 பைசா செஸ் கட்டணமாக பெறப்படுகிறது. இந்த வரி வருவாய், அனைவருக்கும் கல்வி(சர்வ சிக்ஷா அபியான்), மதிய உணவு போன்ற கல்வி திட்டங்களுக்காக மத்திய அரசு செலவிடுகிறது. மத்திய பட்ஜெட்டில் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பங்கு இவ்வரியின் மூலமே கிடைக்கிறது.

பொது பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, “அரசு பள்ளிகளில் கல்வித்தரம் குறைவாக உள்ளதென்ற வாதம் தவறானது. அனைத்து பள்ளிகளிலும் திறமையான ஆசிரியர்கள் உள்ளனர். அரசு பள்ளிகள் குறித்த நம் சமூகத்தின் பார்வை மாற வேண்டும். நடப்பு நிதியாண்டில் மத்திய அரசு பட்ஜெட்டில், கல்விக்காக ஒதுக்கப்பட்ட 31 ஆயிரத்து 36 கோடி ரூபாயில், 20 ஆயிரம் கோடி ரூபாய் வரை, “செஸ்’ கட்டணம் மூலமே அரசுக்கு கிடைத்துள்ளது’ என்றார்.தங்கள் பிள்ளைகளின் கல்விக்காக அரசுக்கு கட்டணம் செலுத்திவிட்டு அவர்களை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதால், பெற்றோருக்கு இரட்டிப்பு செலவு ஏற்படுகிறது. கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக கூறி, பள்ளி நிர்வாகத்தை எதிர்த்து போராடவும் வேண்டியுள்ளது. இதற்கு பதிலாக, பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க இந்த தலைமுறை பெற்றோர் முன்வர வேண்டும். அப்போதுதான், தங்கள் காலத்தில் கல்லூரி படிப்புக்கு செலவு செய்த பணத்தை, தங்கள் பிள்ளைகளின் பள்ளி படிப்புக்கே செலவு செய்ய வேண்டியுள்ளது என்ற புலம்பலில் இருந்து அவர்கள் விடுபட முடியும். அரசு பள்ளிகளின் தரமும் மேலும் உயரும்.


வைரத்தின் வரலாறு-3



விளம்பரங்களில் வைரத்தைப் பற்றி “EF” கலர், “FG” கலர் என்று குறிப்பிடுகிறார்களே, அது என்ன? வைரக்கல் நிறத்தை, ஆங்கில எழுத்துக்களில் குறிப்பிடுகிறார்கள். “D” நிறம் மிக உயர்ந்த வெள்ளையை குறிக்கிறது. இந்த நிற வைரம் கிடைப்பது மிக அரிது. “E” “F” “G”ஆகிய நிறங்கள்தான் அதிகமாக வியாபாரம் செய்யப்படுகிறது. இவைகளில் வித்தியாசம் அதிகமாக இருக்காது. H,I என்று போகும்போது இன்னும் வெண்மை நன்றாக குறையும். J,K,Lஎன்ற நிறங்கள் சிறிது சிறிதாக மஞ்சளாக ஆரம்பிக்கும். இப்படி `பளிச்` சென்ற தன்மைக்கு தகுந்தபடி “Z” வரை நிறம் குறிப்பிடப்படுகிறது.
இந்தியாவில் கிடைத்த பெரிய வைரம் கோகினூர் மட்டும்தானா? வேறு வைரங்கள் ஏதேனும் உண்டா ?

நிறைய உண்டு. அவை:
1. ரீஜென்ட் (Regent): இந்தியாவில் கிடைத்த பெரிய வைரங்களில் இது குறிப்பிடத்தக்கது. இந்த வைரத்திற்கு மற்றொரு பெயர் பிட் வைரம் (Pit Diamond) .
பட்டை தீட்டப்படாத பொழுது இதன் எடை 410 காரட்டுக்கும் மேல். 1700-ல் ஆந்திராவில் கோல்கொண்டாவில் இருந்து 72 கி.மீ. தெற்கில் உள்ள பர்க்கால் சுரங்கத்திலிருந்து தோண்டி எடுக்கப்பட்டது. இது இந்தியாவில் கிடைத்த மிகப் பெரிய வைரங்களில் ஒன்று.
அப்போது சென்னை கவர்னராக இருந்த தாமஸ் பிட் (இவர் முன்னாள் இங்கிலாந்துப் பிரதமர் வில்லியம் பிட்டின் தாத்தா) என்பவரால் இந்த வைரம் சுமார் ஒரு லட்சம் டாலருக்கு வாங்கப்பட்டு இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு 140.50 காரட் எடையுள்ள வட்ட சதுரக் கல்லாக பட்டை தீட்டப்பட்டு, Pit வைரம் என்று பெயர் இடப்பட்டது. பிறகு 1717-ல் பிரெஞ்ச் அரசரால் 5 லட்சம் டாலருக்கு வாங்கப்பட்டு ரீஜென்ட் என்று பெயர் மாற்றப்பட்டது.

இது பல கைகள் மாறி, கடைசியாக நெப்போலியனிடம் போய் சேர்ந்தது. நெப்போலியனுக்கு பணக் கஷ்டம் வந்தபோது, 40 லட்சம் டாலருக்கு இதை ஒரு தனவந்தரிடம் அடகு வைத்து பிறகு மீட்டார். இந்த வைரத்தை நெப்போலியன் தன் போர்வாளின் கைப்பிடியில் பதித்து வைத்திருந்தார்.
இன்று இது பாரிஸ் நகரில் லூவர் மிசியத்தில் உள்ளது.
2. பைகாட் வைரம் (The Pigot Diamond):
இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட இந்த வைரத்தின் எடை சுமார் 48 காரட்கள். 1775-ல் அப்போதைய மெட்ராஸ் கவர்னராக இருந்த பேரன் பைகாட் (Baron Pigot )என்ற ஆங்கிலேயருக்கு சில அரசு காரியங்கள் முடித்து கொடுத்ததற்காக ஒரு இந்திய இளவரசரால் பரிசளிக்கப்பட்டது. இந்த வைரத்திற்கு முதலில் தி கவர்னர்(The Governer)என்று பெயரிடப்பட்டது. அதன் பிறகு பைகாட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1799-ல் இவர் இறந்த பிறகு 1801-ல் அவருடைய சந்ததியினர் இதை நெப்போலியனின் தாயார் லெட்டிசியா போனபார்டே(Letizia Bonaparte)என்பவருக்கு விற்றுவிட்டார்கள். இப்போது இருக்குமிடம் தெரியவில்லை.
3. ஷா வைரம் (Shah Diamond)
இது இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு வித்தியாசமான வைரம். நான்கு புறங்களிலும் நீளமான பட்டையுடன், நிறம் சற்று குறைந்த, உட்புறம் முற்றிலும் சுத்தமான கண்ணாடிபோல் வடிவம் கொண்டது. இந்தியாவில் அகமது நகர் கவர்னராக இருந்த புர்கான் நிஜாம் ஷா என்பவருடைய பெயர் ஒரு பகுதியில் எழுதப்பட்டு உள்ளது. மற்றொரு பக்கத்தில் முகலாய அரசர் ஜஹாங்கீர் மகனுடைய பெயரும், இன்னொரு பக்கத்தில் பாரசீக அரசர் பாத் அலி ஷா(Fath Ali Shah) பெயரும் அவரவர் ஆட்சி புரிந்த வருடங்களை குறிப்பிட்டு அராபிய மொழியில் எழுதப்பட்டுள்ளது. இன்று இது ரஷியாவில் கிரம்ளின் மாளிகையில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா, ஆப்பிரிக்கா தவிர வேறு எங்கும் வைரம் கிடைக்கிறதா?
கிடைக்கிறது. ஆஸ்திரேலியாவில் உள்ள ரியோடின்டோ (Riotinto) சுரங்கம் மற்றும் ரஷ்யா, இஸ்ரேல், பிரேசில் இப்படி பல நாடுகளிலும் வைரம் கிடைக்கிறது. இதைத்தவிர, ஒரு ருசிகர தகவல் என்னவென்றால், மனித உடலிலிருந்தும் வைரம் தயாரித்திருக்கிறார்கள்.அமெரிக்காவில் உள்ள நிணி நிறுவனம் இறந்துவிட்ட ஒருவரின் உடலை முழுவதும் சாம்பல் ஆக்கி அதில் இருந்து கார்பன் வேபர் டெபாஸிஷன் (Carbon vapour deposition method) என்ற ஒரு முறையில் ஒரு காரட் வைரத்தை பரிசோதனை முறையில் உருவாக்கி உள்ளது. ஆனால் இதற்கு ஆகும் செலவு, வாங்கும் வைரத்தை விட பல மடங்கு அதிகம்.
ஆனால் இந்த முறையில் வைரத்தை உருவாக்கலாம் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதைத்தான் நம் முன்னோர்கள் “வைரம் பாய்ஞ்ச உடம்பு” என்றார்களோ என்னவோ!
இப்படி பல புதுமைகள் வைரத்திற்கு இருப்பதால்தான் என்றும் நம்மை அது ஈர்ப்பதாக உள்ளது.



ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.14க்கு கிடைக்கும்: சொல்கிறார்கள் பிரிட்டன் விஞ்ஞானிகள்



பிரிட்டன் விஞ்ஞானிகள், தாங்கள் உருவாக்கி வரும் செயற்கை பெட்ரோல் சுற்றுச்சூழலுக்கு நண்பனாகவும், விலை குறைவாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
இயற்கையில் கிடைக்கும் கச்சா எண்ணெய் மூலம் உருவாக்கப்படும் பெட்ரோலின் விலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பெட்ரோலுக்கு விரைவில் தட்டுப்பாடு ஏற்படும் நிலையும் உருவாகி வருகிறது. பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களை பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால், சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில், பெட்ரோலுக்கு மாற்றாக, செயற்கை பெட்ரோலை பிரிட்டன் விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர்.

இதுகுறித்து, விஞ்ஞானிகள் குழுவின் தலைவர் ஸ்டீபன் பெனிங்டன் கூறியதாவது: இயற்கையில் கிடைக்கும் கச்சா எண்ணெயைக் கொண்டு பெட்ரோல் தயாரிக்கப்படுகிறது. ஆனால், நாங்கள் ஹைட்ரஜனை மையமாகக் கொண்டு செயற்கை பெட்ரோலை உருவாக்கி வருகிறோம். இது இயற்கையான பெட்ரோலை விட மூன்று மடங்கு சக்தி கொண்டதாக இருக்கும். மேலும், இதனால், சுற்றுச்சூழலுக்கும் எந்தவிதமான பாதிப்பு ஏற்படாது. எங்களின் செயற்கை பெட்ரோலை பயன்படுத்தி, இருசக்கர வாகனங்கள், கார், பஸ் மற்றும் விமானங்களையும் இயக்க முடியும். சுற்றுச்சூழலுக்கு நண்பனாக இருக்கும் இந்த பெட்ரோல் 14 ரூபாய்க்கே கிடைக்கும். அடுத்த ஆண்டு இந்த பெட்ரோலை பயன்படுத்தி வாகனங்களை சோதனை அடிப்படையில் இயக்க திட்டமிட்டுள்ளோம். இன்னும் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் இந்த பெட்ரோல் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விற்பனைக்கு வரும். இவ்வாறு ஸ்டீபன் பெனிங்டன் கூறினார்.

பின் தூங்கி முன் எழுபவரா நீங்கள்?மாரடைப்பு வருமாம் ஜாக்கிரதை: அதிகமாக தூங்கினாலும் ஆபத்து தான்



இரவில் தாமதமாக உறங்கி, காலையில் விரைவாக கண் விழிக்கும் வழக்கம் உடையவர்களுக்கு மாரடைப்பு, பக்கவாதம் வரும்’என, லண்டனில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. இதற்காக, தூங்கு மூஞ்சி ஆசாமிகள் சந்தோஷப்பட வேண்டாம். அளவுக்கு அதிகமாக தூங்கினாலும் மாரடைப்பு வருமாம்.பிரிட்டனின் வார்விக் மருத்துவ பள்ளி பல்கலை நடத்திய ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:தற்போது உலகம் முழுவதும் மக்களின் வாழ்க்கை முறை, வேகமாக மாறி வருகிறது. உணவு பழக்கம், நடவடிக்கைகள் ஆகியவற்றிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பெரும்பாலானோர் குறைவான நேரமே தூங்குகின்றனர். குறிப்பாக, இளைஞர்களின் தூக்க நேரம் குறைந்து விட்டது. இரவில் மிகவும் தாமதமாக தூங்கி, அதிகாலையில் கண் விழித்து விடுகின்றனர். இது பல்வேறு பிரச்னைகளுக்கு வழி வகுக்கும்.இவ்வாறு குறைவான நேரம் தூங்கும் வழக்கம் உடையவர்களுக்கு, உணவு சாப்பிட்ட திருப்தியே இருக்காது. இதனால், அவர்களுக்கு கடுமையான பசி ஏற்படும். மேலும், மேலும், அதிகமாக சாப்பிடுவர். இதன்காரணமாக, அவர்களின் உடல் குண்டடித்து விடும். ரத்த அழுத்தம் அதிகமாகி, இருதய நோய்க்கு வழி வகுத்து விடும். இறுதியில், மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோயின் பாதிப்புக்கு இவர்கள் எளிதில் ஆளாகி விடுவர்.

நாங்கள் நடத்திய ஆய்வில், தினமும் ஆறு மணி நேரத்துக்கும் குறைவாக தூங்குவோரில், 50 சதவீதம் பேர் இருதய நோயின் பாதிப்பிற்கும், 15 சதவீதம் பேர், பக்கவாத பாதிப்பிற்கும் ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது.அதற்காக, எப்போது பார்த்தாலும் தூங்கி வழிந்து கொண்டிருக்கும், தூங்கு மூஞ்சி ஆசாமிகள் சந்தோஷப்பட வேண்டாம். அவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும். இரவு நேரங்களில் தொடர்ச்சியாக ஒன்பது மணி நேரத்துக்கும் அதிகமாக தூங்குவோருக்கும், இருதய நோய் பாதிப்பு ஏற்படும். அதிக நேரம் தூங்குவோருக்கு, சில நேரங்களில் அதிகம் களைப்பாக இருப்பது போல் தோன்றும். இது தான் அவர்களுக்கான எச்சரிக்கை. இதற்கு பின்னும், அவர்கள் சுதாரித்துக் கொண்டு, தூங்கும் நேரத்தை குறைக்காவிட்டால், இருதய நோய் பாதிப்பு ஏற்படும்.இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ-பேட் டேப்ளட் பிசி – வினாக்களும் விளக்கங்களும்



ஆப்பிள் நிறுவனம் அதிகார பூர்வமாகத் தன் ஐ-பேட் சாதனத்தை, இந்தியாவில் சில வாரங்களுக்கு முன்னர் விற்பனைக்கு வெளியிட்டது. இதனை வாங்கிப் பயன்படுத்த விரும்பும் பலருக்கும் இது குறித்து பல சந்தேகங்கள் எழுகின்றன. மேலும் பல வினாக்களும் தோன்றுகின்றன. வாசகர்களின் கடிதங்கள் இவற்றைப் பிரதிபலிக் கின்றன. அவற்றை இங்கு பார்க்கலாம்.
1. ஐபேட் ஏன் இந்தியாவில் இவ்வளவு தாமதமாக அறிமுகப்படுத்தப்படுகிறது?
டிஜிட்டல் சாதனச் சந்தையில் இயங்கும் பலரும் இது குறித்து ஆப்பிள் நிறுவனத்தின் மேல் கோபமாக இருக்கின்றனர். ஆப்பிள் நிறுவனம் இந்தியாவை அவ்வளவாகக் கண்டு கொள்வதாக இல்லை. ஐபேட், ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் கூட சென்ற ஜுலை 2010ல் (அமெரிக்காவில் ஏப்ரல் 2010)அதிகாரபூர்வ விற்பனைக்கு வந்தது. ஆனால் இந்தியாவில் ஆறு மாதங்கள் கழித்தே வந்துள்ளது. ஐபேட் பதிப்பு 2 வர இருப்பதாகச் செய்திகள் வந்துள்ள நிலையில், ஆப்பிள் இருப்பில் இருக்கும் தன் ஐபேட் சாதனங்களை இங்கு கொண்டு வந்து கொட்டுகிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஐபோன் விஷயத்திலும் இதே கதைதான் ஏற்பட்டது.
2. ஐ-பேட் வாங்கினால், நான் மட்டுமே முதலில் வாங்கிய ஆளாக இருப்பேனா?
நிச்சயமாக இல்லை. கிரே மார்க்கெட் என்னும் அதிகாரப் பூர்வமற்ற சந்தையில் நிறைய ஐ-பேட்கள் விற்பனை செய்யப்பட்டன. பலரும் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். ஏறத்தாழ 50 ஆயிரம் ஐ-பேட் சாதனங்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வருவதாக ஒரு கணக்கீடு தெரிவிக்கிறது. எனவே நீங்கள் வாங்கிப் பயன்படுத்தினால், துணைக்கு நண்பர்கள் கிடைப்பார்கள். உங்களுக் குத் தெரியுமா? அமெரிக்காவில் இதனை அறிமுகம் செய்த போது, பலர் இரவோடு இரவாக விற்பனை செய்திடும் கடைகள் முன்பாக நின்று வாங்கிச் சென்றனர்.
3. நான் ஐபேட் 2 வரும் வரை காத்திருந்து வாங்கலாமா?
இன்டர்நெட்டில் ஐபேட் 2 குறித்து தகவல் திரட்டிய போது, அதில் இரண்டு கேமராக்கள் (வீடியோ அழைப்பில் பயன்படுத்த ஒன்று) , அதிவேக ப்ராசசர், நல்ல காட்சித் திரை ஆகியன இருப்பதாக அறிவிப்பு வெளியாகி இருந்ததைப் பார்க்க நேர்ந்தது. சாம்சங், மோட்டாரோலா, ஆர்.ஐ.எம். போன்ற நிறுவனங்களும், இந்த சந்தையில் போட்டியில் இறங்கி இருப்பதால், ஐ-பேட் அளவு கூட சற்று சிறியதாக, பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்லும் அளவில் இருக்கலாம். இவை வேண்டும் என்றால் காத்திருக்கலாம்.
4. கடைகளில் சென்று இப்போது ஐ-பேட் வாங்கிட முடியுமா?
ஆப்பிள் நிறுவனப் பொருட்களை விற்பனை செய்வதற்கென்றே சில மையங்கள் இயங்குகின்றன. அங்கு இவை கிடைக்கின்றன. வழக்கம்போல, மற்ற கடைகளில் கிரே மார்க்கெட்டிலும் கிடைக்கின்றன. சென்னையில் ஒரு கடையில் சென்ற மாதம் ரூ.5,000 முன்பணமாகப் பெற்று பதிவு செய்தனர்.
5. எத்தனை மாடல்கள் வெளியாகி யுள்ளன? விலை எவ்வளவு?
ஆறு மாடல்கள் கிடைக்கின்றன. வை-பி நெட்வொர்க் இணைப்புடன் 16ஜிபி, 32 ஜிபி, 64 ஜிபி மெமரியுடன் மூன்று மாடல்கள். வை-பி யுடன் 3ஜி இணைந்த மூன்று மாடல்கள் இதே மெமரியுடன் கிடைக்கின்றன. முதல் வகை வை- பி மட்டும் கொண்ட ஐபேட் விலை முறையே ரூ. 27,900, ரூ. 32,900, ரூ.37,900. இவற்றில் 3ஜி இணைந்த மாடல்கள் விலை ரூ. 34,900, ரூ. 39,900 மற்றும் ரூ. 44,900.
6. ஐ-பேட் சாதனத்தில் என்ன செயல்பாடு களை மேற்கொள்ள முடியும்?
ஐ-பேட் ஒரு டச்ஸ்கிரீன் கம்ப்யூட்டர். டெஸ்க்டாப் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டரைப் போல அதிகத் திறனுடன் இருக்காது. ஆனால் தொலை தொடர்பு மற்றும் பொழுதுபோக்கிற்கு அருமையான சாதனம். பொதுவாக, உலக அளவில், ஐ-பேட் சாதனம் இன்டர்நெட் பார்க்க, இமெயில் அனுப்ப, நண்பர்களுடன் இன்ஸ்டன்ட் மெசேஜ் அனுப்ப, பெற, (ஆன் ஸ்கிரீன் கீ போர்டு மூலம்), புகைப்படங்களை பிரவுஸ் செய்திட, இசையை ரசித்துக் கேட்க, திரைப்படங்கள் பார்க்க, இ-புக் படிக்க, செய்தித்தாள்கள், பருவ இதழ்கள் படிக்க மற்றும் சாட்டிலைட் உதவியுடன் வழி காட்டுதலைப் பெற பயன்படுத்தப்படுகிறது.
7. என்னுடைய லேப் டாப் கம்ப்யூட்டருக்குப் பதிலாக, ஐ-பேட் சாதனத்தைப் பயன்படுத்தலாமா?
முழுமையாக முடியாது. இது ஒரு துணை சாதனம் தான். சோஷியல் நெட்வொர்க் பணிகளுக்கு அதிகம் பயன்படுத்தலாம்.
8. தொலைபேசி அழைப்புகளை ஐ-பேடில் ஏற்படுத்த முடியுமா?
முடியாது.
9. ஐ-பேட் எவ்வளவு பெரியது? அதன் அளவு என்ன?
ஏ4 தாள் அளவைக் காட்டிலும் சற்று சிறியதாக இருக்கும். உயரம் 9.56 அங்குலம் . அகலம் 7.47 அங்குலம், தடிமன் 0.5 அங்குலம். மல்ட்டி டச் எல்.இ.டி. திரை 9.7 அங்குலம் குறுக்களவு கொண்டது. வை-பி மாடல் எடை 680 கிராம்; 3ஜி இணைந்தது 730 கிராம்.
10. ஐ-பேட் எப்படி சார்ஜ் செய்யப் படுகிறது?
வழக்கம்போல ஒரு பவர் அடாப்டர் மூலம் சார்ஜ் செய்திடலாம். உங்களுடைய டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்பின் யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தும் சார்ஜ் செய்திடலாம். சாதனம் வாங்கும்போதே பவர் அடாப்டரும் சேர்த்துத் தரப்படுகிறது.
11. இன்டர்நெட் பிரவுசிங்கை, ஐ-பேடில் எப்படி மேற்கொள்ளலாம்?
வை-பி இன்டர்நெட் இணைப்பு மூலம் மேற்கொள்ளலாம். இதற்கு வை-பி சூழ்நிலை உள்ள இடத்திற்குச் செல்ல வேண்டும். வெளிநாடுகளில் அனைத்து இடங்களிலும் இந்த வை-பி இணைப்பு கம்பங்கள் இருக்கும். ஆனால் இந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த வசதி கிடைக்கிறது.
12. டாட்டா போட்டான் அல்லது ரிலையன்ஸ் டேட்டா கார்டினைப் பயன்படுத்தி ஐ-பேடில் இன்டர்நெட் இணைப்பு பெற முடியுமா?
ஐ-பேடில் யு.எஸ்.பி. போர்ட் இல்லை. எனவே இவற்றைப் பயன்படுத்த இயலாது.
13. ஆப்பிள் நிறுவனம் ஐ-பேட் சாதனத்தில் பயன்படுத்தத் தரும் அப்ளிகேஷன்களை, இந்தியாவில் டவுண்லோட் செய்து இயக்க முடியுமா?
தாராளமாக. ஐ-பேட் சாதனத்திற்கென, ஆப்பிள் நிறுவனம் பல புரோகிராம்களை, கட்டணம் இன்றியும்,கட்டணத்தின் பேரிலும் தருகிறது. எடுத்துக்காட்டாக, ஆதஞீஞ்ஞுtண் என்ற ஒரு இலவச புரோகிராமினை டவுண்லோட் செய்து இணைப்பு செலவினைக் கட்டுப் படுத்தலாம்.
14. ஐ-பேட் சாதனத்திற்கான டேட்டா பிளான் தரும் நிறுவனங்கள் எவை? கட்டணம் என்ன?
இந்தியாவில், பி.எஸ்.என்.எல். நிறுவனம் தான், 3ஜி ஐ-பேட் சாதனத்திற்கான டேட்டா திட்டங்களை அறிமுகப்படுத்தியது. வரையறை அற்ற பயன்பாட்டிற்கு மாதம் ரூ.999. 6ஜிபி டேட்டா பெற ரூ. 599. பின்னர் பத்து கேபி டேட்டாவிற்கு 1 பைசா. ஒரு நாள் மட்டும் பயன்படுத்தி அளவற்ற டேட்டா பெற ரூ.99. வோடபோன், ஏர்டெல், டாட்டா டெலிசர்வீசஸ், ரிலையன்ஸ் கம்யூனி கேஷன்ஸ் மற்றும் ஐடியா செல்லுலர் ஆகியவை, ஐ-பேட் சாதனத்திற்கான மைக்ரோ சிம் கார்டுகளைத் தயாராய் வைத்துள்ளன. கட்டண விபரங்கள் இன்னும் தெரியவில்லை.
15. ஒரே ஒரு நிறுவனத்தின் துணையுடன் தான் ஐ-பேட் சாதனத்தைப் பயன்படுத்த முடியுமா?
இல்லை. ஐ-போன் போல நிறுவனம் ஒன்றுடன் இணைக்கப்பட்டதாக ஐ-பேட் வெளியாகவில்லை. எந்த நிறுவனத்தின் சிம் கார்ட் டேட்டா திட்டத்தினையும் பயன்படுத்தலாம்.
16.இதற்கான மைக்ரோ சிம் கார்டினை எப்படிப் பெறுவது?
இதனை வழங்கும், மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களிடம் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். அதில் உள்ள விபரங்களைச் சரி பார்த்த பின்னர் மைக்ரோ சிம் கார்டு தருவார்கள்.
17. வெளியூர்களுக்குப் பயணிக்கையில் ஐ-பேடில் இணைக்கப் படும் சிம் கார்டு இயங்குமா? தொடர்பு சரியாகக் கிடைக்குமா?
பி.எஸ்.என்.எல். நிறுவனம் “panIndia 3G Internet” என்ற ஒரு திட்டத்தினை வழங்குகிறது. மற்ற தனியார் நிறுவனங்கள் இதற்கென மற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளனர். இந்தியாவில் இன்னும் 3ஜி முழுமையாக வரவில்லை. வரும்போது இதனைப் பெறலாம்.
18. ஐ-பேட் போன்று மற்ற நிறுவனங்கள் சாதனங்களை வெளியிட்டுள்ளனவா?
ஆம். சாம்சங் நிறுவனத்தின் காலக்ஸி டேப், ஆலிவ் டெலிகாம் நிறுவன ஆலிவ் பேட், டெல் ஸ்ட்ரீக் ஆகியவற்றை இங்கு குறிப்பிடலாம். இன்னும் சில நிறுவனங்கள் தங்களின் சாதனங்களைக் கொண்டு வர இருக்கின்றன. இவை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விலை குறைக்கப்பட்டும் வருகின்றன. எடுத்துக் காட்டாக, முதலில் ரூ.38,000 விலையிட்ட சாம்சங் சாதனம் தற்போது ரூ.30,000க்குக் கிடைக்கிறது. மொபைல் போன் போலவும் பயன்படுத்தும் ஸ்ட்ரீக் ரூ.33,000க்குக் கிடைக்கிறது.

குழந்தைகளுக்கு டயாபர் உபயோகிக்கும் முறை



மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை மாற்றவேண்டும்
வீட்டில் உள்ளபோது உபயோகிக்க வேண்டாம்
வெளியில் செல்லும் போதும் , பயணங்களின் போதும் உபயோகிக்கலாம்
தொடர்ந்து மாற்றாமல் இருந்தால் டயாபர் ரேஷ் எனப்படும் allergy ஏற்படும்
ஆண் குழந்தைகளுக்கு இறுக்கமாக போடகூடாது , இதனால் விரைப்பையின் வெப்பநிலை உயர்ந்து பின் நாட்களில் விந்து அணு குறைபாடு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது .
துணி diaper சிறந்தது என ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது . எனவே வீட்டிலேயே சுத்தமான புது துணியை பயன்படுத்தலாம் .
துணியை துவைத்தபின் டெட்டோல் போன்ற கிருமி நாசினிகளை உபயோகித்தால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படக்கூடும் .

அலர்ஜி தொல்லைக்கு அசத்தல் டிப்ஸ்



தட்பவெப்பம்,உணவு, சுற்றுச் சூழல் மாசு உள்பட பல காரணங்களால் அலர்ஜி உண்டாகிறது. இதற்கு சரியான காரணத்தை கண்டுபிடித்தால் தவிர வேறு எந்த மருந்துக்கும் குணமாகாது. பலர் அலர்ஜியை ஆரம்பத்தில் பெரிதாக கருதாமல் விட்டுவிடுகிறார்கள். மருத்துவரிடம் செல்லாமல், தங்களுக்கு தெரிந்த மருந்துகளை உபயோகிக்கின்றனர். இதனால் அலர்ஜி குணமாவதற்கு பதிலாக பெரிதாகி தொல்லை கொடுக்கிறது என்கிறார்
அலர்ஜி உடலில் எதிர் விளைவுகளை ஏற்படுத்துகிறது. வெளியில் இருந்து உடலுக்கு ஒவ்வாத பொருட்கள் நுழையும் போது, உடல் காட்டும் நோய் எதிர்ப்பு தன்மையின் காரணமாக உருவாவதுதான் அலர்ஜி. இதன் வெளிப்பாடாக தோல் அரிப்பு, மூக்கடைப்பு, தொடர் தும்மல், கண் எரிச்சல் மற்றும் நமைச்சல் போன்றவை தோன்றுகிறது. மலரின் மகரந்தம், செல்லப் பிராணிகளாக வளர்க்கப்படும் நாய், பூனை ஆகியவற்றின் தோலில் உள்ள ஒரு பொருள், முடி ஆகியவற்றில் இருந்தும் அலர்ஜி ஏற்படலாம். அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களுடன் தொடர்பு ஏற்பட்டதும் உடல் இம்யுனோகுளோபுலின் இ என்ற எதிர்ப்புப் பொருளை உற்பத்தி செய்கிறது. இதன் விளைவாக கண் மற்றும் சுவாச வழிகளில் ஹிஸ்டமின் போன்ற எதிர்ப்புத் தன்மை மிகுந்த பொருட்கள் உருவாகின்றன. இது போன்ற வேதிப் பொருட்கள் உடலில் உற்பத்தியாவதால் கண்ணில் நமைச்சல், கண்கள் வீங்கி சிவத்தல், மூக்கடைப்பு, மூக்கில் வடிதல், தொடர் தும்மல், இருமல், தோலில் சிவந்த தடிப்பு போன்ற அலர்ஜிக்கான அறிகுறிகள் உண்டாகிறது.
பூக்கும் காலத்தில் காற்றில் பரவும் பூக்களின் மகரந்தம் சிலருக்கு அலர்ஜியை உருவாக்கும். வீட்டில் உள்ள தூசியில் பூஞ்சைக் காளான் துகள்கள் இருக்கும். மேலும் நுண்ணுயிர்கள் தூசியில் கலந்துள்ளன. புளிப்பான மற்றும் குளிர்ச்சியான உணவுகள் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்தும். இதனால் உங்களுக்கு அலர்ஜி ஏற்படுவதற்கு சரியான காரணத்தை மருத்துவரின் ஆலோசனையுடன் கண்டறிந்து அதற்கு மருந்து சாப்பிடுவது சிறந்தது. சிலருக்கு பரம்பரைக் காரணத்தாலும் உருவாகலாம். இது போன்ற தொல்லைகளுக்கு தானே மருத்துவம் செய்து கொள்வதை தவிர்த்து மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம் என்கிறார் ஜெயந்தி ஈசன்.

பாதுகாப்பு முறைகள்:
* உணவில் அலர்ஜி ஏற்படுவதற்கு சிலவகை புரதங்கள் காரணமாகின்றன. பசும்பால், முட்டை, கடலை, கோதுமை, மீன், ஷெல்மீன், சோயா போன்ற பொருட்களில் இவ்வகைப் புரதம் காணப்படுகிறது. மேலும் குழந்தைகளுக்கு சில வகை சாக்லேட்டுகளால் கூட அலர்ஜி ஏற்படலாம். அலர்ஜி ஏற்படுத்தும் உணவைக் கண்டறிந்து கட்டாயம் தவிர்க்கவும்.
* வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, குமட்டல், வாந்தி, மயக்கம், உதடு, கண், முகம், நாக்கு, தொண்டை வீங்குதல் ஆகிய அறிகுறிகள் உணவு அலர்ஜியால் ஏற்படுகிறது.
* உணவுப்பொருட்களை உபயோகிப்பதற்கு முன்பு அவற்றின் லேபிளில் ஒத்துக்கொள்ளாத பொருள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைப் படித்து தெரிந்து கொள்ளவும்.
* சமைக்கும் போது அலர்ஜி உள்ள பொருட்களை தவிர்க்கலாம். அவற்றிற்கு நிகரான சத்து உள்ளவற்றை உணவில் சேர்க்கலாம்.
* ஏசி பயன்படுத்துபவர்கள் வடிகட்டும் வலையை அடிக்கடி மாற்றவும்.
* தூசு, மகரந்த அலர்ஜி உள்ளவர்கள் வெளியில் செல்லும் போது மாஸ்க் அணிந்து சென்றால் அலர்ஜியை தவிர்க்கலாம்.
* பாய், தலையணை, மெத்தை போன்றவற்றை தூசு இல்லாமல் பார்த்து கொள்வது நல்லது.
* துணி பயன்படுத்தும் நாற்காலிகளுக்கு பதிலாக தோல் அல்லது வினைல் பயன்படுத்தலாம்.
* சமையலறை மற்றும் குளியலறையில் காற்றை வெளியேற்றும் கருவி பொருத்துவது அவசியம்.
* ரோமம் நிறைந்த நாய், பூனை மற்றும் கிளி, புறா போன்ற பறவைகள் ஆகியவற்றை செல்ல பிராணிகளாக வளர்ப்பதை தவிர்க்கவும். அப்படியே வளர்த்தாலும் அவற்றுக்கு வாரம் ஒரு முறை சோப்பு போட்டு குளிப்பாட்டவும். வீட்டுக்கு வெளியில் அவற்றை பராமரிக்கலாம். கண்டிப்பாக படுக்கை அறையில் அனுமதிக்க கூடாது.
* நைலான் உள்ளிட்ட வழவழப்பான துணி வகைகளால் தோல் அலர்ஜி வரலாம். புதிய துணிகளில் உள்ள சாயம் ஒத்துக் கொள்ளாமல் போகலாம். எந்தத் துணியையும் துவைத்த பின் பயன்படுத்தவும். உள்ளாடைகளை நீண்ட காலத்துக்கு பயன்படுத்துவதை தவிர்த்து அடிக்கடி மாற்றவும். சுத்தத்தால் அலர்ஜி தொல்லைகளை தவிர்க்கலாம்.
*பிரச்னை உள்ளவர்கள் உணவில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து விளக்குகிறார் உணவு ஆலோசகர் சங்கீதா: அலர்ஜி பிரச்னை இருக்கும் நேரத்தில் உப்பில் ஊற வைத்த பொருட்களான ஊறுகாய், வற்றல், கருவாடு கரம் மசாலா சேர்க்கப்படும் பிரியாணி உள்ளிட்ட உணவு வகைகள், பிரிட்ஜில் அதிக நாட்கள் வைத்திருக்கும் பால், தயிர், மட்டன், சிக்கன் ஆகியவற்றை சாப்பிடக் கூடாது. இதன் மூலம் ஜலதோஷம் உள்ளிட்ட தொந்தரவுகள் அதிகரிக்கும். மேலும் சில சிப்ஸ் வகைகள் சைனீஸ் உணவு வகைகளான பிரைட் ரைஸ், மற்றும் நூடுல்ஸ் ஆகியவற்றில் அஜினமோட்டோ உப்பு சேர்க்கப்படுவதால் அவற்றையும் தவிர்க்கவும். எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் பஜ்ஜி, போண்டா, பூரி ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது. நார்ச்சத்து அதிகம் உள்ள கீரை வகைகள், தானியங்கள், முழு கோதுமை உள்ளிட்டவைகளுக்கும் தடா போடவும்.
அலர்ஜிக்கு ஒத்துக்கொள்ளாத உணவு வகைகளைத் தவிர்ப்பதன் மூலம் அதனால் உண்டாகும் தொல்லைகளைத் தவிர்க்க முடியும். சீரகத்தை வறுத்து பொடியாக்கி தினமும் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி குடித்து வருவதன் மூலம் அலர்ஜி ஏற்படுவதைத் தவிர்க்கலாம். மேலும் புதினாவை வாரத்தில் 3 முறை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். மோரில் உப்பு கலந்து வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டு சாப்பிடுவதன் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.
*அக்ராகாரம் வேர், திப்பிலி இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும். இரண்டு கிராம் பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் நீங்கும்.
?*அகத்திக் கீரை சாறுடன் துவரம்பருப்பு 100 கிராம் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து வேக வைத்து சாப்பிட்டால் அலர்ஜியால் உண்டாகும் கண் எரிச்சல் குணமாகும்.
*அலர்ஜியால் தொடர்ந்து வரும் தும்மலின் தொல்லையை தவிர்க்க அகத்திக் கீரை சாறு மற்றும் அகத்திப்பூ சாறு இரண்டிலும் தேன் கலந்து குடிக்கலாம்.
*வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி அருகம்புல் சாறு எடுத்து குடித்தால் அலர்ஜியால் ஏற்படும் சளித்தொல்லையில் இருந்து விடுபடலாம்.
*அரைக்கீரைத் தண்டுடன் மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து அதிகாலையில் குடித்தால் சளிப் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
*ஆடாதொடை இலையை பொடி செய்து தேன் கலந்து குடித்தால் சளித்தொல்லை தீரும்.
*இஞ்சிச் சாறு, வெங்காயச் சாறு இரண்டையும் தலா பத்து மிலி அளவுக்கு எடுத்து ஒன்றாகக் கலந்து குடித்தால் அலர்ஜியால் உண்டாகும் வாந்தி நிற்கும்.
*சாப்பிட்ட உணவு அலர்ஜியானால் கொத்தமல்லி இலைச் சாற்றுடன் உப்பு கலந்து குடித்தால் நஞ்சு வெளியேறி விடும்.
*உருத்திர சடை இலைச் சாறு இரண்டு சொட்டு மூக்கில் விட்டால் அலர்ஜியால் உண்டாகும் மூக்கடைப்பு குணமாகும்.
*எலுமிச்சம் பழத்தைக் கண்களில் அடிக்கடி ஒற்றிக் கொண்டால் கண் எரிச்சல் குணமாகும். அலர்ஜியால் கண்ணில் நீர்வடிதலும் நிற்கும்.


உலகின் அரியவகைப் பறவையினங்கள் இதோ!
உலகின் மிக அரியவகைப் பறவைகளைப் படம் பிடிக்கும் போட்டிபற்றி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது.

உலகின் அரிய வகைப் பறவைகள் திட்டம் என்ற அமைப்புதான் இந்தப் போட்டியை நடத்துகின்றது. இது 2010ல் ஆரமபிக்கப்பட்ட ஒரு போட்டி.


பூமியில் அழிந்து போகும் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள 566 வகை பறவையினங்களைப் படம் பிடித்து வைப்பது தான் இந்தப் போட்டியின் முக்கிய குறிக்கோள்.

இவற்றின் படங்களையும் பண்புகளையும் உள்ளடக்கியதாக விவரமான ஒரு புத்தகத்தை வெளியிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.


இதுவரை ஆயிரக்கணக்கான படங்கள் வந்து குவிய ஆரம்பித்துள்ளன. இவற்றுள் தெரிவு செய்யப்படும் சில நூற்றுக்கணக்கான பறவைகளின் படங்கள் 2012ல் வெளியிடப்படவுள்ள புத்தகத்தில் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளன.

இந்தப் புத்தகம் விற்பனைக்கு விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானம் உலகளாவிய ரீதியில் பறவைகள் பாதுகாப்புக்குச் செலவிடப்படவுள்ளன. இந்தப் பேட்டியில் வெற்றிபெற்ற சில புகைப்படங்கள் இங்கு தரப்பட்டுள்ளன.