சமூகம்



மன்னிப்பதில் பெண்களே முதலிடம்: ஆய்வில் தகவல்

மன்னிக்கும் குணம் ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.
யுனிவர்சிட்டி ஆப் பாஸ்க் உளவியல் துறை சார்பில் மன்னிப்பு பற்றி ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.
45 முதல் 60 வயதுக்கு உட்பட்ட பெற்றோர் மற்றும் 17 முதல் 25 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளிடம் என மொத்தம் 140 பேரிடம் இது குறித்து கருத்து கேட்கப்பட்டது. ஒருவர் தவறு செய்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எனவே அவர்களை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி விடாமல் மன்னிக்க வேண்டும் என பெரும்பாலானவர்கள் கருத்து தெரிவித்தனர்.
அதிலும் தவறு செய்தவர்களை மன்னிப்பதில் பெண்கள் முன்னிலை வகிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆண்கள் மன்னிப்பதில் பின் தங்கி உள்ளனர். மற்றவர்களின் நிலையில் இருந்து பார்க்கும் மனப்பான்மை தான் மன்னிக்கும் குணத்துக்கு அடிப்படையாக விளங்குகிறது.
அந்த வகையில் பெண்கள், ஆண்களை விட மற்றவர்களின் உணர்வுகளை எளிதாகப் புரிந்து கொள்ளக் கூடியவர்கள் என ஆய்வாளரும், யுனிவர்சிட்டி ஆப் பாஸ்க் உளவியல் துறை பேராசிரியருமான கார்மென் மகந்தோ கூறியுள்ளார்.
மன்னிப்பது பற்றி பெற்றோரும், பிள்ளைகளும் தெரிவித்துள்ள விளக்கங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகவே உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது




நண்பர்களிடையே காதல் பூப்பதற்கு அடிப்பட காரணங்கள்.


ஆண் தோழன், பெண் தோழி என்ற வித்தியாசங்கள் கடந்து, நட்பு என்ற வட்டத்தின் எல்லை கடக்கத் தூண்டும் பதின்பருவத் தீண்டல்கள்.
விரும்பியவர்களிடத்தில் மனம் சில விதிகளை மீற விரும்பும். எதிர்பாலின நட்பில் மட்டும் மனம் ஆயிரம் ஜாலம் காட்டும். நட்புக்கும் காதலுக்கும் எது எல்லைக் கோடு? எதைக் கடந்தால் காதல்? உறக்கம் தொலைக்கவைக்கும் உணர்வை, உறவை, உளவியலைப் பற்றிச் உளவியல் நிபுணர்கள் என்ன சொல்கின்றார்களெனில்,
'' 'இவையிவைதான் நட்பின் கட்டுப்பாடுகள் அல்லது எல்லைக் கோடுகள்’ என்று ஆண்-பெண் உறவைத் தெளிவாக வரையறுக்க முடியாது. பலருக்கு நட்பும் காதலும் பாலும் நீரும் போலக் கலந்திருப்பதால் குழப்பத்திலேயே திளைப்பார்கள். ஓரளவுக்கு நெருங்கிப் பழகிய பிறகு தெரியாத நபரைவிட, தெரிந்த நபரே நல்லது என்று பெண்கள் உணர்கிறார்கள்.
நண்பர்களிடையே காதல் பூப்பதற்கு அடிப்படை நான்கு காரணங்கள்.

முதல் காரணம்,:- நெருக்கம். மிக அருகருகே இருப்பதால், அடிக்கடி பார்ப்பதால், பேசுவதால் காதல் ஏற்படும்.

இரண்டாவது காரணம்:- நிறம், நடை, உடை, பாவனை, பிடித்த விஷயங்கள், கோட்பாடு, கொள்கை, சினிமா, வேலை என இருவருக்குமே ஒரே மாதிரியான கருத்து ஒத்திசைவால் ஏற்படும் காதல். பரஸ்பர உதவி, அக்கறை காரணமாக ஏற்படுவது.

மூன்றாவது காரணம்:- உதாரணத்துக்கு, பிறந்த நாள் வாழ்த்து சொல்வது, பரிசுப் பொருள் வழங்குவது, உடல்நலம் இல்லாத சமயம் கவனித்துக்கொள்வது போன்றவற்றால் காதல் அரும்பலாம்.

நான்காவதாக:- இரு பாலினத்தவரும் எதிர் பாலினத்தவர் மீது வைத்திருக்கும் உடல் ரீதியான கவர்ச்சி, அழகுணர்ச்சி ஆகிய காரணங்கள்.
பொதுவாக ஆண்கள், அழகான பெண்களைத்தான் காதலிப்பார்கள். நேர் எதிராகப் பெண்களோ, தன்மேல் அன்பாக, அக்கறையாக, மனம் குதூகலிக்கப் பேசுபவனாக, தனக்குப் பாதுகாப்பாக இவன் இருப்பான் என்று எந்த ஆணை நினைக்கிறார்களோ அவர்களைத்தான் காதலிப்பார்கள். பெண்ணின் அழகைப் பார்த்து ஆணுக்குக் காதல் அரும்ப, ஆணின் அரவணைக்கும் குணமே பெண்ணுக்குக் காதலைத் தூண்டும் சக்தியாக இருக்கிறது.
ஆண் இன்னொரு ஆணுடன் பழகும்போது நட்புக்காகப் பணம், வேலை ஏன் உயிரையே கொடுக்கலாம். பெண் அதிகபட்சமாகத் தன்னையே கொடுக்க முடிவெடுப்பாள். வசதியான பெண், நன்றாகப் படிக்கும் ஏழைப் பையனுக்கு உதவ வேண்டும் என்று பரிதாபத்தில் பழகினால்கூட, 'உன் மேல இவ்ளோ அன்பு வெச்சிருக்காளே. மச்சான், இது சத்தியமா காதல்தான்டா’ என்று அவனது நண்பர்களின் தூண்டுதலை அவனே நம்பத் தொடங்குவான். இது பெண்ணுக்குத் தெரிந்தால் அவளுக்குப் பேரதிர்ச்சிதான் மிஞ்சும்.
ஆண் காதல் சொல்லி பெண் ஏற்கவில்லை எனில், சொறி...இனிமே ஃப்ரெண்ட்ஸாவே பழகலாம்’ என்று சொல்லி மறுத்தாலும், அது அவன் அடிமனதில் வண்டல் மண் போலத் தேங்கி இருக்கும். அடுத்தடுத்து தொடர்ச்சியாகத் தன் காதலை சமயம் கிடைக்கும்போது எல்லாம் வெளிப்படுத்திக்கொண்டே இருப்பான். இறுதி வரை ஆணின் எண்ணம் மாறாது.
ஆண் - பெண் நட்பு கம்பி மேல் நடப்பதற்குச் சமம். அந்த நட்பில் அதிகம் பேசப் பேச நெருக்கம் அதிகமாகும். நட்பு, காதலாகும் என்ற உண்மையை, அதில் இருக்கும் நல்லது கெட்டதுகளை உணர்ந்து, இறுதி வரை நட்பாகவே இருக்கலாம். அல்லது அந்த நட்பு காதலாக உருமாறும் சமயம் அது உங்களுக்கு உண்மையாக, நம்பிக்கையான வாழ்நாள் துணையாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், மேற்கொண்டு தொடரலாம்!''
ஆதலினால், நட்பின் கணவாய் வழியே காதல் தேசம் புகுதல் சரி/தவறு. உங்கள் தேர்வு எது என்பது உங்கள் கையில்!


பெண்கள் மனதில் இடம்பிடிக்க காத்திருங்கள்!

மரத்தில் பழம் தொங்குகிறதே என்று உடனே அதைப் பறித்துவிடக்கூடாது. அப்படி பறித்து சாப்பிட்டால், அது காயாக, புளிப்பாக இருக்கலாம். ஆனால் காத்திருந்து, நன்றாக பகுத்துவிட்டது எனத் தெரிந்தவுடன் அதனை தொட்டாலே உங்கள் கைகளில் விழுந்துவிடும். அதற்குப்பின் அந்தப் பழத்தின் ருசியே அலாதியாகத்தான் இருக்கும்.
பெண்களும் ஒரு பழம் போன்றவர்களே!
ஆரம்பத்திலேயே செக்ஸ் பெற அவர்களிடம் அவசரம் காட்டாமல் ஆண்கள் காத்திருக்க வேண்டும் என விரும்புவார்கள்.
கொஞ்சம் பேச்சு வளர்ந்து தொடவும், முத்தமிடவும் விரும்புகிறீர்கள் என்றாலும் அதற்கும் காத்திருக்க வேண்டும்.
பெண்களுக்கும் ஆசை, ஆர்வம் உண்டு.
ஆனால் ஆண்களுக்கு அது தானாக கனியும் வரை காத்திருக்கும் பொறுமை மட்டுமே வேண்டும்.
சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும் போது ஒரு பெண்ணைத் தொட்டுப் பேசுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அப்பொழுது அந்தப் பெண்ணின் செய்கையில் இருந்தே கனி எத்தனை தூரம் பழுத்திருக்கிறது என்பதனை கண்டுகொள்ளலாம்.
நீங்கள் தொட்டவுடன், "என்ன, பழக்கமெல்லாம் மாறுது, ரொம்பவும் தைரியம் வந்திடுச்சா... இதெல்லாம் நம்மகிட்ட வச்சுக்காதே மவனே..." என்பது போல கிண்டலாகவோ, பொய்க் கோபத்துடனோ சொல்கிறாள் என்றால், கனி தேவையான அளவு பழுத்துவிட்டது என அர்த்தம்.
நீங்கள் அடுத்தகட்ட நடவடிக்கையினை தொடரலாம் என்பதுதான் அதன் அர்த்தம்.
கை பட்டவுடன் விலகி ஓடினாலோ, அல்லது கோபத்துடன் தள்ளிவிட்டாலோ, இன்னும் கொஞ்சநாள் காத்திருக்க வேண்டும் என அர்த்தம். மேற்கொண்டு ஏதாவது நடவடிக்கையினை நீங்கள் தொடர்ந்தால் காதலே காணாமல் போய்விடலாம்.
இதைவிட, கை பட்டவுடன் ஏதோ ஒரு மாபெரும் குற்றம் நடந்ததுபோல் காச் மூச் என கத்தி, மிக மோசமான வார்த்தைகளால் தன்மானத்தை பாதிக்கும் அளவு திட்டினால், உடனடியாக குறைந்தது ஒரு மாதமாவது கண்ணுக்குத் தட்டுப்படக்கூடாது என்று அர்த்தம். காதல் இன்னும் காயாகக்கூட மாறவில்லை என்பதால், இப்போது நீங்கள் மன்னிப்புக் கேட்டால் மட்டுமே காதல் தொடரும், இல்லையெனில் காதல் காலியாகிவிட்டது என அர்த்தம்.
நாம் சொல்லியிருக்கும் வழிமுறைகளை மட்டும் மிகச்சரியாக, தெளிவாகப் பின்பற்றினால் போதும், கண்டிப்பாக பெண்கள் மனதில் இடம்பிடித்துவிட முடியும். இவற்றை அப்படியே நூற்றுக்கு நூறு சதவிகிதம் கடைப்பிடிக்க வேண்டும் என அர்த்தமில்லை.
அதே நேரம் ஆளுக்கு ஏற்ற மாதிரி கூட்டிக்குறைத்து நடந்துகொண்டு வெற்றி பெறுவது உங்கள் கைகளில்தான் உள்ளது.


 ஊடலு‌க்கு‌ப் ‌பி‌ன் கூட‌ல்

ஊடலும‌், அத‌ற்கு‌ப் ‌பி‌ன் கூடலு‌ம், அ‌வ்வ‌ப்போது ‌சிறு ‌சிறு ச‌ண்டைகளு‌ம் கூட தா‌ம்ப‌த்‌திய வா‌ழ்‌க்கை‌யி‌ல் ஒரு ந‌ல்ல ‌‌விஷயமாக‌க் கருத‌ப்படு‌கிறது.
ஒரு பெரு‌ம் ச‌ண்டை, ச‌ண்டை‌க்கு‌ப் ‌பி‌ன் சமாதான‌ம், சமாதான‌த்‌தி‌ற்கு‌ப் ‌பி‌ன் தா‌ம்ப‌த்ய உற‌வு வை‌ப்பது ஒ‌ன்று‌ம் முர‌ண்பாடான ‌விஷயம‌ல்ல. கால‌ம்காலமாக வ‌ந்து கொ‌ண்டிரு‌க்கு‌ம் ‌விஷய‌ம்தா‌ன். பெரு‌ம்பாலான தம்பதிய‌ர்க‌ள் அனுப‌வி‌த்த ஒரு ‌விஷ‌யமாகவு‌ம் இது இருக்கும்.
ஏதோ ஒரு கரு‌த்து வேறுபா‌ட்டினா‌ல் த‌ம்ப‌திகளு‌க்கு‌ள் ச‌ண்டை வரலா‌ம். ஒருவ‌ர் த‌ன் தவறை உண‌ர்‌ந்து அ‌ல்லது ஒருவரு‌க்கொருவ‌ர் ‌வி‌ட்டு‌க் கொடு‌த்து த‌ங்களது தவறுகளை உண‌ர்‌ந்து ம‌ன்‌னி‌ப்பு‌க் கே‌ட்கலா‌ம். அ‌ல்லது தவறை இருவரு‌ம் மற‌ந்து ‌விடலா‌ம். ‌பிறகு எ‌ன்ன.. ஒரே கொ‌ஞ்ச‌ல்தானே..

கணவன், மனைவி இருவருக்குள் ஒரு பரஸ்பர அன்பை உருவாக்கும். அதே போல் பெண்களின் அந்த மூன்று நாட்களில் கணவன்மார்கள் கண்டிப்பாக ஆதரவாக, உதவியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயல்புதான். இதை ஆண்கள் புரிந்து கொண்டு ஆதரவாக நடந்து கொண்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஒ‌வ்வொரு ‌விஷய‌த்தையு‌ம், அவ‌ர்களது இட‌த்‌தி‌ல் இரு‌ந்து பாரு‌ங்க‌ள் உ‌ங்க‌ள் வா‌ழ்‌க்கை பலா‌ப் பழ‌த்‌தி‌ன் தோ‌ல் போ‌ல் அ‌ல்லாம‌ல், பலா‌ச் சுளை போ‌ல் மாறு‌ம்.


அன்பு தான் காதலுக்கு முக்கியம்.

ஓர் ஆணை காதல் வளையத்தில் சிக்கவைப்பது மிகவும் எளிது என்றுதான் பெரும்பாலான பெண்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரே ஒரு பார்வை, ஒரே ஒரு சிரிப்பு, கொஞ்சம் செக்ஸியான உடல் அசைவு என எதையாவது செய்தால் ஆண்கள் அம்பேல். அப்படியே குட்டி போட்ட பூனை மாதிரி தங்களையே சுற்றிச் சுற்றி வருவார்கள் என்றெல்லாம் அவர்கள் நினைப்பதெல்லாம் மாயைதான்.
அப்படியானால் ஆண்கள் பெண்களுக்காக அலைபவர்கள் இல்லையா என கேட்காதீர்கள். பெண்களுக்காக அலைபவர்கள்தான். ஆனால் காதலுக்காக அல்ல. குழம்பாதீர்கள்.
பெண்களிடமிருந்து எவ்விதமான எதிர்பார்ப்புகளும் இல்லாமல், பணம் செலவில்லாமல், எவ்வித பொறுப்புகளும் இல்லாமல் செக்ஸ் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே ஆண்கள் அலைவார்கள். ஆனால், காதல் என்று வரும்போது அநேகம் பேர் காணாமல் போய்விடுவார்கள்.
நாம் இங்கே பொறுப்புள்ள, ஒரு பெண்ணை குழந்தைபோல பாதுகாக்கும் ஆண்களுக்கு எப்படிப்பட் பெண்களைப் பிடிக்கும், அவனைக் கவர என்ன வேண்டுமெனப் பார்க்கலாம்.
திருமணம் முடித்த பெரும்பாலான பெண்கள் கவுன்சிலிங்கிற்காக வரும்பொழுது, ஒரு விஷயத்தை அடிக்கடி சொல்வதுண்டு, "எனக்கு கணவரைப் பிடிக்கிறது, ஆனால் அதை அவரிடம் ஒரு நாள்கூட சொன்னதில்லை. எப்படி சொல்வது எனத் தெரிவதில்லை" என்பார்கள்.
இதற்குக் காரணம் என்னவென்றால், ஆண்கள் பெண்களிடமிருந்து கடமைகளை மட்டுமே எதிர்பார்க்கிறார்கள். அன்பைத் தவிர.
இப்படிப்பட்ட பெண்களிடம் நீங்கள் யாரிடம் முழு அன்பையும் வெளிப்படுத்துகிறீர்கள்? என்று கேட்டால், அவர்கள் சொல்லும் பதில் பெரும்பாலும் நாய், பூனை, மீன், புறா எனப்படும் வளர்ப்பு மிருகங்களாகவே இருப்பதுண்டு.
நாயை மடியில் தூக்கிவைத்துக் கொஞ்சுவது, முத்தம் கொடுப்பது. உரிமையுடன் செல்லமாக அடிப்பது என எல்லாவற்றையும் செய்வார்கள். ஆனால் அதனை மனிதர்கள் மீது முயற்சி செய்வதில்லை. ஏனெனில் அங்கே ஈகே வந்துவிடும்.
காதல் திருமணமாக இல்லாமல் பெற்றோர்கள் பேசிவைத்த கல்யாணம் என்பது பெரும்பாலும் கடமைக்கான செயல்பாடுகளாகத்தான் இருக்குமே தவிர, காதல் வெளிப்படுவதில்லை.
ஆரம்பத்தில் இருவரிடமும் இருக்கும் ஈகோ குறைந்தால்தான் காதல் வரும். அதன் பின்னரே அன்பும், அந்நியோன்யமும் ஏற்படும் பின் காதல் வரும்.
ஆண்கள் இந்த விஷயத்தில் எதிர்பாராமல், அன்பை செலுத்தி அவ்வப்போது அசத்திவிடுவார்கள்.
பெண்களும் அன்பினை செலுத்த வேண்டும் என்ற மனநிலையில் இருப்பதுதான் காதலுக்கு முக்கியம்.


காதலுக்காக காத்திருக்கலாமே!

காதல் பிரச்சனை வீட்டில் தெரியவந்தவுடன் கண்டிப்பாக பிரச்சனைகள் வரவே செய்யும்.
குழந்தையாக பாவித்துக் கொண்டிருப்பவர்கள் திடீரென மிகப்பெரிய முடிவினை அவர்களாகவே எடுக்கும் பொழுது கோபம், ஆத்திரம் எல்லாம் பெற்றவர்களுக்கு ஏற்படுவது நியாயமே.
'ஏன் நமது நியாயமான காதல் ஆசையை, ஆர்வத்தைப் புரிந்து கொள்ளாமல் பெற்றவர்கள் கோபத்தில் இருக்கிறார்கள்?' என சிந்திக்காமல், அவர்களது கோபம் நியாயமே, அது தீர்வதற்கு சிறிது நேரம் கொடுக்கலாம் என காத்திருங்கள்.
இந்திரா காந்தி படிக்கும் காலத்தல் பெரோஸ் காந்தியைக் காதலித்தார். விஷயம் பிரதமராக இருந்த நேருவின் காதுகளுக்குப் போனது. 'நான்கு வருட காலம் இருவரும் சந்திக்காமல், பேசிக்கொள்ளாமல், கடிதம் எழுதாமல் இருங்கள். அதற்குப் பின்னர் இருவருக்கும் காதல் இருப்பதாகத் தெரிந்தால் திருமணம் முடித்து வைக்கிறேன்' என்று நிபந்தனை விதித்தார்.
இருவரும் காதலுக்காக சொன்ன சொல்லைக் காப்பாற்றிக் கிடந்தார்கள். அவர்கள் இருவரும் அன்போடு காதலில் காத்துக் கிடந்திருப்பதைப் பார்த்த நேரு, விரைவிலேயே இருவருக்கும் திருமணம் முடித்து வைத்தார். பெற்றோர்களது கோபம் தீரும் வரை காத்திருங்கள். காத்திருந்தால் கண்டிப்பாக நல்லதே நடக்கும்.
பெற்றோர், காதல் இரண்டும் மனிதனுக்கு இரு கண்களைப் போன்றது என ஏற்கனவே பார்த்தோம். அதனால் இரண்டுடனும் சேர்ந்து வாழ்வதற்காக முடிந்தவரை கஷ்டப்பட்டு சம்மதம் பெறுதலே நல்லது.
சில பெற்றோர்கள் காதலுக்கு ஆதரவாகவே இருப்பார்கள். ஆனால், இந்த காதலுக்கு இசைவு தெரிவித்தால் அடுத்ததாக தம்பி, தங்கைக்கு திருமணம் முடிப்பதில் சிக்கல் ஏற்படும் என பயப்படுவார்கள். அவர்களது சந்தேகம், பயம் நியாயமானதே. அதனால் உங்களது காதலால் குடும்பத்தில் மற்றவர்களது எதிர்காலத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என உறுதியளிக்க வேண்டியது உங்கள் கடமை.
காதல் திருமணங்கள் என்பது இப்பொழுது வெகு சகஜமாக நடைபெறுகின்றன. இது சமூக குற்றம் அல்ல என்பதை எடுத்துச் சொல்லி அவர்களது அன்பினைப் பெற்று அதன் பின்னர் திருமணம் முடிப்பதே நல்லது.
காதல் என்ற கனவுக் கோட்டையினைப் பிடிக்க ஏழு மலை, எட்டு கடல் கடந்து போகும் பொறுமை இருவருக்கும் இருக்கவேண்டும். அப்பொழுதுதான் இருவரும் உன்மைக் காதல் செய்கிறார்கள் என அர்த்தமாகும்.