| தன்னைச் சீண்டி வம்பிழுத்த இளைஞனுடன் போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண் ஒருவர் உயிருடன் தீ வைத்து கொழுத்தப்பட்ட சம்பவம் போபாலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் போபாலை அடுத்துள்ள நரசிங்கபுரம் என்ற மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் 15 வயது நிறைந்த தலித் வகுப்பைச் சார்ந்த இளம்பெண் ஒருவர் தன்னைச் சீண்டி கேவலப்படுத்திய தஸ்ராத் சவுத்ரி என்ற இளைஞனுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ஆத்திரமுற்ற சவுத்ரி அந்த இளம்பெண் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்தார். இதன் காரணமாக அந்த இளம்பெண்ணின் உடல் முழுவதும் தீ பரவியது. உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றார். நடந்த சம்பவங்களைக் குறித்து பாதிக்கப்பட்ட தலித் பெண் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். இளம்பெண் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்த இளைஞன் சவுத்ரியைக் காவல்துறை கைது செய்து விசாரணை செய்து வருகின்றது. |
Friday, 18 February 2011
சீண்டியவர்களுடன் போராடிய தலித் இளம்பெண் உயிருடன் எரிப்பு!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment