Monday, 16 May 2011

தேனிலவுக்கு சென்ற பெண் மர்ம முறையில் மரணம்



ஆப்பிரிக்காவில் தேனிலவிற்கு சென்ற இளம்பெண்ணை பாலியல் வன்முறைக்கு ஆட்படுத்தியதாக மூன்று பேர் மீது லண்டன் பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இந்திய வம்சாவழியை சேர்ந்த பெண் ஆனி(28) இவர் தனது கணவர் ஷெரின்(31) உடன் தன்னுடைய தேனிலவை கொண்டாடுவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13ம் திகதி தென்னாப்ரிகாவிற்கு சென்றிருந்தார்.
அந்நாட்டின் பல்வேறு நகரங்களை சுற்றிப்பார்த்த பின்னர் கேப்டவுன் நகருக்கு வந்த போது அங்கு ஆனி மர்ம நபர்களால் கடத்தப்பட்டார். இச்சம்பவத்தில் ஷெரின் மற்றும் அவர்கள் வந்த கார் டிரைவரும் மாயமானார்கள்.
இந்நிலையில் கடத்தப்பட்ட ஆனி பாலியல் ரீதியான கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார் என கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கணவர் ஷெரீனே கொலைக்கு காரணமாக இருந்ததும், கொலையை நிறைவேற்ற ஆப்பிரிக்காவை சேர்ந்த கூலிப்படையை நியமித்ததும் தெரிய வந்தது.
இதனையடுத்து கூலிப்படையினர் கைது செய்யப்பட்டனர். மேலும் ஷெரின் மனநலம் பாதிப்பு காரணமாக பிரிஸ்டல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment