Tuesday, 24 May 2011

ஐஸ்லாந்தில் பயங்கர எரிமலை வெடிப்பு (வீடியோ இணைப்பு)



ஐஸ்லாந்து பனிப்பாறைப் பகுதியில் உள்ள கிரிம்ஸ்வோடன் எரிமலை சனிக்கிழமை வெடித்தது. அதிலிருந்து புகை தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது.
எரிமலை வெடித்த போது அந்த வழியாக ஒரு விமானம் சென்றது. அந்த விமானம் பத்திரமாக சேர்ந்ததா என்றும் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த தகவலை ஐஸ்லாந்து வானிலை ஆய்வு மைய அலுவலக அதிகாரி ஹார்ல்டர் எரிக்சன் தெரிவித்தார்.
கிரிம்ஸ்வோடன் எரிமலையில் ஜி.எம்.டி நேரம் இரவு 7 மணிக்கு புகை வெளி வரத் துவங்கியது. 4 மணி நேரத்தில் இந்த புகை 11 கிலோ மீற்றர் அளவில் அதாவது 6.8 மைல் அளவிற்கு பரவியது.
மற்றொரு வானிலை ஆய்வு மைய அதிகாரி பிரிட்ஜான் மாக்னுசன் கூறுகையில்,"2 மணி நேரத்தில் 20 கிலோ மீற்றர் தூரத்திற்கு கரும்புகை பரவியது" என தெரிவித்தார்.
எரிமலை வெடிப்பால் சாம்பல் நிறப்புகை சுற்றுப்பகுதியில் கடுமையாக பரவியது. இதனால் அருகாமையில் உள்ள இடங்கள் தெரியவில்லை. எரிமலை வெடிப்பால் அந்த வான் பகுதியில் சிறிது நேரம் விமானங்கள் பறக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. சாலைப்போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது.
ஐஸ்லாந்தில் மிக தீவிரமான எரிமலை வெடிப்பு உள்ள பகுதி கிரிம்ஸ்வோடன் ஆகும். கடந்த 1922ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டு வரை 9 முறை இங்கு எரிமலை வெடித்துள்ளது.
வடக்கு அட்லாண்டிக் தீவு தேசமான வாட்னஜோகுல் பனிப்பகுதிக்கு தாழ்வாக இப்பகுதி அமைந்துள்ளது. ஐஸ்லாந்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் எஜா போல் பகுதியில் எரிமலை வெடித்தது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment