Monday, 4 July 2011

அவுஸ்திரேலியாவில் அதிகளவில் பாலியல் கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்கள்



அவுஸ்திரேலியாவில் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகள் கற்பழிப்பு மற்றும் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதாக புகார்கள் கூறப்படுகின்றன.
அதை தொடர்ந்து ஒரு பெண்கள் அமைப்பு சமீபத்தில் ஒரு சர்வே மேற்கொண்டது. ஓன்லைன் மூலம் நடத்தப்பட்ட சர்வேயில் 1500 மாணவிகள் வாக்களித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
அதில் பல்கலைக்கழகங்களில் படிக்கும் 6 மாணவிகளில் ஒருவர் கற்பழிக்கப்படுவதாக தெரியவந்தது. அதாவது 17 சதவீதம் பேர் கற்பழிப்பு கொடுமைகளுக்கு ஆளாவதாகவும், 12 சதவீதம் பேர் கற்பழிப்பு முயற்சியில் சிக்கியதாகவும் தெரிவித்து இருந்தனர்.
இந்த சம்பவங்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே நடப்பதாக அதிர்ச்சி தகவல்களும் தெரியவந்துள்ளன. பொதுவாக பல்கலைக்கழகத்தில் நடுத்தர மற்றும் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவிகள் படிக்கின்றனர். இவர்கள் இதுபோன்ற கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என பெண்கள் அமைப்பு போர்க்கொடி உயர்த்தியுள்ளது.

No comments:

Post a Comment