Wednesday, 16 February 2011

இலங்கையில் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் ரயில் சேவை : ஆரம்ப நிகழ்விலேயே குளறுபடி


இந்திய அரசாங்கத்தின் கடனுதவிடன் நேற்றைய தினம் ஆரம்பமான இலங்கையின் கடுகதி புகையிரத சேவையின் ஆரம்ப நிகழ்வில் சிக்கல்கள் ஏற்பட்டதாக பி.டி.ஐ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஆரம்ப நிகழ்விலேயே நிர்ணயிக்கப்பட்ட நேரத்தையும் கடந்து, ஒரு மணித்தியாலங்கள் தாமதமாகவே இந்த புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போக்குரவத்து அமைச்சர் குமாரவெல்கம இந்த நிகழ்வுக்கு ஒரு மணித்தியாலம் தாமதித்தே வந்துள்ளமையே இதற்கான காரணம்.
அத்துடன் இந்த நிகழ்வின் அடித்தள ஏற்பாடுகள் முறையாக இல்லாத காரணத்தினால், நிகழ்வில் கருத்து தெரிவிக்கவும் அவர் மறுப்பு வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து ஏற்பாட்டளர்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்திய அரசாங்கதின் 167 மில்லியன் டொலர்கள் செலவில் காலிக்கும் - மாத்தரைக்கும் இடையிலான மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் செல்லும் புகையிரத சேவைகள் நேற்றைய தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டன.
இந்த சேவைக்காக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருந்த புகையிரத என்ஜின் தயாராகாததால், அதற்கு பதிலாக சீனாவின் லொக்மோடிவ் என்ஜின் பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment