Saturday, 19 February 2011

17 வருடங்களாக சூரிய ஒளியைப் பார்க்காத பணிப்பெண் !



சவுதி அரேபியாவில் ரியாட் நகரில் சுமார் 17வருடமாக சிறைவக்கப்பட்ட இலங்கைப் பெண் மீட்க்கப்பட்டுள்ளார். சுமார் 39 வயதில் சவுதி சென்ற இப் பெண், தன் அங்கு செல்லும்போது தனக்கு 8 வயதில் மகனும் 6 வயதில் ஒரு மகளும் இருந்ததாக தனது நினைவுகளை தூசிதட்டிச் சொல்லியுள்ளார். ஆச்சரியமாக இருக்கிறதா. ஆம் அவருக்கு தற்போது 56 வயது ஆகிறது. தாய்மொழியான சிங்களத்தை மறந்த நிலையில், பிள்ளைகளை மற்றும் குடும்பத்தை மறந்த நிலையில் அவர் மீட்கப்பட்டுள்ளார். அவரை மீட்டபோது அவர் ஒரு இயந்திரத்தைப் போல வேலைசெய்துகொண்டு இருந்ததாக தூதர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காலையில் இதனைச் செய்யவேண்டும், மதியம் இந்த வேலை என அவர் பழக்கப்பட்டுவிட்டதாகவும், சுய நினைவைக் கூட இழந்து அவர் வேலைசெய்து வந்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். அவர் வேலைக்குச் சென்ற எஜமான் அவரை ஒரு கைதியாக் வீட்டில் அடைத்துவைத்தது மட்டுமல்லாது, வெளியுலகோடு எத்தொடர்பையும் பேண தடைவிதித்துள்ளதோடு, வெளியே செல்லவும் அனுமதிக்கவில்லை. இதனால் பூட்டிய வீட்டிற்குள் அவர் 17 வருடமாக வேலைமட்டும் செய்துகொண்டு இருந்திருக்கிறார். சில காலங்களில் அவர் தனது பிள்ளைகளை மறந்து உறவுகளை மறந்து தனது தாய்மொழியையும் மறந்துவிட்டார்.

அந்த அளவுக்கு அவருக்கு வேலைகள் திணிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாது, அவருக்கு சம்பளம் கூட வழங்கப்படவில்லை என்பதே பெரும் கொடுமையான விடையமாகும். அனைத்தையும் மறந்த நிலையில் அவரை இலங்கை தூதர அதிகாரிகள் விடுவித்துள்ளனர். அவரோடு திரும்பத் திரும்பப் பேசி அவரது நினைவுகளை வரவழைத்ததால், அவர் தனது உறவுகள், மற்றும் குடும்பத்தார் குறித்த தகவல்களை மெல்ல மெல்ல வழங்கிவருவதோடு, சிங்களத்தையும் சற்று பேச ஆரம்பித்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. விடுவிக்கப்பட்டு இலங்கைத் தூதரகத்தில் அவர் இருந்தபோதும் தன்பாட்டில் அங்குள்ள வேலைகளை அவர் செய்ய ஆரம்பித்துள்ளார். இதை அவரே அறியாமல் செய்ய ஆரம்பித்தவேளை தான் இப் பெண்ணை அந்த எஜமான் எவ்வளவு கொடுமைசெய்திருக்கிறார் என்பது அவர்களுக்கு விளங்கியுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இருந்து பல பணிப்பெண்கள் வறுமைகாரணமாக அரபு நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் செல்கின்றனர். எண்ணைக் குதங்களை வைத்து இலகுவாக பணம் சம்பாதிக்கும், திமிர் பிடித்த எஜமானர்களிடன் இவர்கள் சிக்கித் தவிப்பது பெரும் துன்பகரமான நிகழ்வுகளாக உள்ளன. கஷ்டப்படாமல் பணம் சம்பாதிக்கும் இவர்கள் போன்ற எஜமானர்கள் மற்றவர்களைக் கஷ்டப்படுத்திப் பார்ப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர். இக் கொடுமைகள் உடனடியாக நிறுத்தப்படவேண்டும். பெண் விடுதலை பற்றிப் பேசிவரும் அமைப்புகள் இது குறித்து கவனம் செலுத்துவது நல்லது.

No comments:

Post a Comment