Thursday, 17 February 2011

பஹ்ரேனில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் 4 பேர் பலி

பஹ்ரேனில் இடம்பெற்று வரும் அந்நாட்டு அரசாங்கத்திற்கெதிரான ஆர்ப்பாட்டத்தின் போது 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

அந்நாட்டு தலைநகரான மனாமாவில் உள்ள பேர்ல் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டிருந்தனர்.

இவர்களைக் கலைக்க பொலிஸார் முற்பட்டபோது இடம்பெற்ற மோதல் சம்பவத்திலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் இதில் இம்மோதலில் சிக்கி 50 பேர் காயமடைந்துள்ளனர்.

கடந்த 3 நாட்களாக அங்கு தொடரும் போராட்டங்களில் அந்நாட்டு ஜனாதிபதி ஷேய்க் கலிபா பின் சல்மான் அல் கலிஃபா பதவி விலகவேண்டும், அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment