Wednesday, 16 February 2011

கண்ணீருடன் விடைபெற்றார் ரொனால்டோ

பிரேஸிலிய உதைப்பந்தாட்ட நட்சத்திரம் ரொனால்டோ சர்வதேச போட்டிகளில் இருந்தான தனது ஓய்வை கண்ணீர் மல்க ஊடகங்களுக்கு அறிவித்தார்.
முப்பத்து ஐந்து வயதான ரொனால்டோ கடந்த சில வருடங்களாக உபாதைகளால் அவதிப்பட்டு வந்தார்.

கடந்த உலகக்கிண்ண போட்டிகளின் போதும் இவருக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் அவரது ஓய்வு தொடர்பான செய்திகள் வெளிவந்த போதிலும் நேற்று சாஹோ பஹோலோவில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தனது ஓய்வை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த ரொனால்டோ உதைப்பந்தாட்டத்திற்காக தான் அனைத்தையும் தியாகம் செய்ததாகவும், விளையாடும் ஆர்வம் உள்ள போதிலும் தனது உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை எனவும், இம்முடிவானது தனது முதல் மரணம் எனவும் குறிப்பிட்டார்.

உலகின் மிகச் சிறந்த உதைப்பந்தாட்ட வீரர்களில் ஒருவராக கருதப்படும் ரொனால்டோ உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட போட்டிகளில் 15 கோல்களை அடித்து அதிக கோல்களை அடித்தவராக திகழ்கின்றன்றார்.

No comments:

Post a Comment