| நடிகை சினேகா தனது கண்களை நேற்று பிப்.15 அன்று தானம் செய்தார். |
| இதற்கான படிவத்தின் கையெழுத்திட்டு 'ராஜன் ஐ கேர்' மருத்துவமனைக்கு அவர் வழங்கினார். தமிழ் சினிமாவின் புன்னகை இளவரசி என அழைக்கப்படும் நடிகை சினேகா பல்வேறு சமூக நலப்பணிகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்கும் ரோட்டரி கிளப் முயற்சிக்கு ஆதரவு திரட்டும் வகையில் தன்னை அந்த அமைப்பில் இணைத்துக் கொண்டு நிதியுதவியும் செய்தார். இப்போது தனது கண்களை தானம் செய்துள்ளார் சினேகா. இதற்கான விழா நேற்று காலை சென்னை 'ராஜன் ஐ கேர்' மருத்துவமனையில் நடந்தது. கண் தான பத்திரத்தில் கையெழுத்திட்டு மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கிய சினேகா, கண் தானம் செய்வதன் மூலம், வாழ்க்கையை தொடர்ந்து வாழும் வாய்ப்பு கிடைக்கிறது என்றார். |
Thursday, 17 February 2011
கண் தானம் செய்தார் சினேகா
Labels:
கண் தானம் செய்தார் சினேகா
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment