Monday, 21 February 2011

மலேசியா வாசுதேவன் காலமானார்



பிரபல பின்னணிப் பாடகர் மலேசியா வாசுதேவன்  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில்  காலமாகியுள்ளார். 
அண்மைக்காலமாக சுகவீனமடைந்த நிலையில் சென்னை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர்,  சிகிச்சை பலனளிக்காத நிலையில்  காலமாகியுள்ளார்.
பிரபல பின்னணிப் பாடகரான மலேசியா வாசுதேவன் கடந்த 25 ஆண்டுகளில் எட்டாயிரத்திற்கும் அதிகமான தமிழ்த் திரைப் பாடல்களைப் பாடியுள்ளார்.   'பூங்காற்று திரும்புமா.. என் பாட்டை விரும்புமா''   'ஆசை நூறு வகை வாழ்வின் நூறு சுவை''  போன்ற ஏராளமான பாடல்களை  பாடி ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.
மேலும் இவர்  முதல் வசந்தம், ஊமை விழிகள்,  திருடா திருடா உட்பட 85க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அத்துடன், இவர் தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
இவரது மகன் யுகேந்திரன்  பின்னணிப் பாடகராகவும்இ நடிகராகவும் இவரது மகள் பிரசாந்தினி பின்னணிப் பாடகியாகவும் உள்ளனர்.

No comments:

Post a Comment