Monday, 21 February 2011

அமெரிக்க காதலர்களுக்கு இந்து முறைப்படி திருமணம்


அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ மத காதலர்கள் இந்திய கலாசாரத்தில் கவரப்பட்டு, இந்து முறைப்படி தோட்டத்தொழிலாளர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர்.

அமெரிக்கா வாஷிங்டன்னைச் சேர்ந்தவர் தாமஸ்பிப்கின்(39). தனியார் நிறுவனத்தில் மக்கள் தொடர்பு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இவர், அதேபகுதி சேர்ந்த தனியார் நிறுவன வர்த்தக ஆலோசகர் லுகான்கிளைனை(32), ஐந்து ஆண்டுகளாக காதலித்தார்.

கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த காதலர்கள் இருவரும் ஒரு வாரத்திற்கு முன்பு இந்தியாவுக்கு சுற்றுலா வந்தனர். இவர்கள் இரண்டு நாட்களுக்கு முன் மூணாறுக்கு வந்தனர்.

இந்திய கலாச்சாரத்திலும், மூணாறின் இயற்கை எழிலாலும் கவரப்பட்ட இவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்பினர்.

மூணாறு அருகே லட்சுமி எஸ்டேட் வெஸ்ட் டிவிஷனில் உள்ள லட்சுமி அம்மன் கோயிலில் திருமணத்திற்கான ஏற்பாடுகளை, இவர்கள் தங்கி இருந்த ஓட்டல் ஊழியர்கள் செய்தனர்.

திருமணத்தை காணவும், மணமக்களை வாழ்த்தவும் தோட்டத்தொழிலாளர்கள் உள்ளிட்ட பொது மக்கள் கோவிலில் ஏராளமாக கூடினர்.

மணமகன் வேட்டி, ஜிப்பாவும், மணமகள் கவுனும் அணிந்திருந்தனர். நேற்று மாலை 5.30 மணிக்கு செண்டை மேளம் முழங்க தாமஸ்பிப்கின், லுகான்கிளைனின் கழுத்தில் தாலி கட்டினார்


No comments:

Post a Comment