Monday, 14 March 2011

அவுஸ்திரேலியாவில் இந்திய பெண் கொலை



அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள கால்வாய் அருகே சூட்கேஸ் ஒன்றில் இந்திய பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 11 ம் திகதியன்று கட்டிட தொழிலாளர்களால் கால்வாய் கரையில் இருந்து சூட்கேஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறந்தவர் தோஷா தாக்கர்(24) என பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தியாவைச் சேர்ந்த இவர் சிட்னியில் உள்ள IT கல்லூரியில் படித்து வந்தள்ளார். தோஷா பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சூட்கேசில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக டேனியல் ஸ்டானி(19) என்பவரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மார்ச் 9ம் திகதி இந்த கொலை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment