Thursday, 28 April 2011

மட்டக்களப்பில் 10 அடி நீளமான முதலை பிடிக்கப்பட்டது


மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை கிராமத்திற்குள் புகுந்த முதலைiயொன்றை பொலிஸார் பிடித்துள்ளனர்.
நேற்றையதினம் மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதிக்கு அண்மையில் உள்ள வீட்டிற்குள் குறித்த முதலை புகுந்து பதுங்கியிருந்தபோது அதனை கண்ணுற்ற கிராமத்தவர்கள் களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து குறித்த முதலையினை பிடித்துக்கட்டி வைத்து வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு அறிவித்துள்ளனர்.
அங்கு விரைந்த வனஜீவராசிகள் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் குறித்த முதலையை கொண்டு சென்று அம்பாறை தேசிய பூங்காவில் விட்டதாக திணைக்களத்தின் அதிகாரி ரி.கேதிஸ் தெரிவித்தார்.
சுமார் 10 அடி நீளத்தினைக்கொண்ட குறித்த முதலை களுதாவளை கிராமத்திற்குள் பிடிபட்டுள்ளதை அறிந்து அப்பகுதியை சேர்ந்த பெருமளவிலான மக்கள் அதனை பார்வையிட்டனர்.

No comments:

Post a Comment