Thursday, 28 April 2011

தனது மூன்று குழந்தைகளைக் கொன்ற தாய்க்கு 16 ஆண்டு சிறைத் தண்டனை



மூன்று குழந்தைகளைக் கொன்ற தாய் தெரசா ரிகிக்கு 16 ஆண்டு கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.கடந்த ஓகஸ்ட் மாதம் தனது எடின்பர்க் இல்லத்தில் 47 வயது ரிகி தனது 8 வயது இரட்டையர் குழந்தைகள் ஆஸ்டின், லூக் மற்றும் 5 வயது மகள் செசிலியா ஆகியோரைக் கத்தியால் குத்திக் கொன்றார். குழந்தைகளை வைத்துக் கொள்வது தொடர்பான கருத்து வேறுபாட்டில் அவர் இந்த தீவிர முடிவை எடுத்தார்.
குழந்தைகள் ரத்த வெள்ளத்தில் அடுத்தடுத்து இறந்து கிடந்தனர். கட்டிடத்தில் எரிவாயு வெடிப்பு ஏற்பட்ட போது அந்தக் குழந்தைகள் கொடூரமாகக் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. குழந்தைகளைக் கொன்ற அமெரிக்கா தாய் ரிகி தானும் தற்கொலைக்கு முயன்று இரண்டாவது மாடியில் இருந்து குதித்துள்ளார். இதில் அவர் மோசமாக காயம் அடைந்தார்.
கிளார்சோ உயர் நீதிமன்றம் அவருக்கு 16 ஆண்டு கால சிறைத் தண்டனையை இன்று விதித்தது. ரிகியும் அவரது கணவர் பாங்குலேவும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். பாங்குலே ஷெல் பிரிட்டன் என்ஜினியர் ஆவார்.
குழந்தைகளை தங்கள் வசம் வைத்துக் கொள்வது தொடர்பாக இருவருக்கும் இடையே சட்டப் போராட்டம் நீடித்து வந்தது. இந்த நிலையில் ரிக் தனது குழந்தைகளைக் கொன்றுள்ளார்.

No comments:

Post a Comment