Monday, 16 May 2011

சிறுவன் கொலை வழக்கு: இளம்பெண் உட்பட 3 இளைஞர்கள் கைது



கத்தியால் குத்தப்பட்டு வீதியில் இறந்து கிடந்த 15 வயது சிறுவன் கொலை தொடர்பாக 3 இள வயது நபர்கள் கைது செய்யப்பட்டனர்.இந்த நபர்களில் ஒருவர் 17 வயது பெண் ஆவார். கொலை செய்யப்பட்ட சிறுவனின் பெயர் டெமிடயோ ஒகுனேயே. இந்த சிறுவன் கொலை தொடர்பாக பிரிக்ஸ்டனின் கிரோன் காரியு, கேம்பர்வெல் பகுதியைச் சார்ந்த 18 வயதான டாரியஸ் க்வாக்யே,18 மற்றும் 17 வயது இளம் பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று ஸ்காட்லாந்து பொலிசார் தெரிவித்தனர்.
கொலையாளிகளாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இளைஞர்கள் சுட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்கள். கொலை செய்யப்பட்ட சிறுவன் தெற்கு லண்டனில் உள்ள பெக்காமில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தான்.
புதன்கிழமை காலை 10.30 மணிக்கு அந்த சிறுவன் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு கொண்டு சென்ற 6 மணி நேரத்தில் அந்த சிறுவன் இறந்தான். இந்த நகரில் இந்த ஆண்டு
கொல்லப்பட்ட 5வது இளைஞர் டெமிடயோ.
சிறுவர்கள் தொடர்ந்து இந்த பகுதியில் கொலை செய்யப்படுவது பெற்றோர்களுக்கு பெரும் கவலை அளித்துள்ளது. கேம்பர்வெல் கோர்மாண்ட் சாலையில் அந்த சிறுவன் கொலை செய்யப்படுவதற்கு 2 மணி நேரம் முன்பாக அவனது பிளாக்பெர்ரி போன் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
சிறுவன் கொலை தொடர்பாக 4வது இளைஞர் கைது செய்யப்பட்டார். இருப்பினும் அந்த இளைஞருக்கு மே மாதம் வரை ஜாமீன் தரப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment