ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி காரணமாக 26 ஆயிரம் பேர் இறந்தனர். மீட்பு குழுவினரால் இடிபாடுகளை இன்னும் முழுமையாக அகற்ற முடியவில்லை. இதனால் ஜப்பான் மக்கள் தங்கள் விடுமுறை நாளில் நிலநடுக்கம் பாதித்த பகுதிகளில் இடிபாடுகளை அகற்றும் பணியில் இறங்கினர். நிலநடுக்கத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட இசினோமகி நகரில் உள்ள சென்சு பல்கலைக்கழகத்தில் ஆயிரக்கணக்கான தன்னார்வ தொண்டர்கள் குவிந்துள்ளனர். மீட்பு பணியை மேற்கொள்வதற்கு தயாராக ஜம்ப்சூட், ரப்பர் பூட்ஸ் மற்றும் தொப்பியுடன் வந்துள்ளனர். இசினோமகி நகரில் உள்ள பிரபல புத்த கோயில் மற்றும் நினைவிடத்தில் மக்கள் துப்புரவு பணியை நேற்று மேற்கொண்டனர். இயந்திரங்களை பயன்படுத்த முடியாத குறுகலான இடங்களை மக்கள் சுத்தம் செய்தனர். |
Sunday, 1 May 2011
விடுமுறை நாட்களில் இடிபாடுகளை அகற்றிய ஜப்பான் மக்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment