Wednesday 7 December 2011

4500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய சிட்டி குழுமம் முடிவு

உலகளவில் பொருளாதார சரிவு ஏற்பட்டு வருவதால் செலவை குறைக்க இனி வரும் காலங்களில் 4,500 பேரை பணிநீக்கம் செய்ய சிட்டி குழுமம் திட்டமிட்டுள்ளதாக சிட்டி குழும தலைமை நிர்வாகி விக்ரம் பண்டிட் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பொருளாதார நெருக்கடியின் போது கடும் சரிவை சந்தித்த சிட்டி குழுமம் இன்னும் அதிலிருந்து முழுமையாக மீளவில்லை. இந்நிலையில் அடுத்த சில மாதங்களில் உலகெங்கும் 4,500 பேரை பணியிலிருந்து நீக்கப் போவதாக அந்த குழுமம் அறிவித்துள்ளது.
உலகெங்கும் இந்த வங்கியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர். வங்கியின் செலவுகளைக் கட்டுப்படுத்த, இதில் 2 சதவீதம் பேரை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சிட்டி வங்கியின் தலைமை செயல் அதிகாரியான விக்ரம் பண்டிட் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த காலாண்டு முதல்  தொடங்கும் இந்த பணிநீக்க நடவடிக்கை சில காலாண்டுகள் வரை தொடரும் என தெரிவித்துள்ளார். மேலும் செலவு அதிகரித்து வருவதால் ஒவ்வொரு ஆண்டும் 3-5 சதவீதம் வரை இலக்கின் அளவு குறைந்து வருவதாகவும், 2011ம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அளவிற்கு செலவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் விக்ரம் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment