சிரியாவில் அந்நாட்டு ஜனாதிபதி ஆசாத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்து வரும் நிலையில் ஐபோன்(iPhone) உபயோகிப்பதை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது.
சிரியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் பலர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அங்கு இடம்பெறும் கலவரங்கள் பற்றிய விவரங்கள் மக்களிடையே சென்றடைவதை தடுக்கவே ஐபோனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் இங்கிலாந்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கலவரம் ஏற்பட்ட போது அங்கு கலவரம் பரவுவதற்கு பிளாக்பெரி கைபேசி காரணமாக இருந்ததால் பிளாக்பெரி கைபேசிக்கு தடைவிதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment