Thursday, 28 April 2011

உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு புதிய முறைமை அறிமுகம்



உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு புதிய முறைமைகளை சுவிட்சர்லாந்து ஆய்வாளர்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.உடல் மற்றும் மூளை ஆகியவற்றுக்கு இடையிலான செயற்பாடுகளின் அடிப்படையில் இந்த புதிய சிகிச்சை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உளவியல் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு இந்த புதிய தொழில்நுட்பம் பயனுள்ளதாக அமையும் என குறிப்பிடப்படுகிறது.
பிரான்கோயிஸ் அனசர்மெட் மற்றும் பியரே மகிஸ்டரி ஆகிய இரு நரம்பியல் நிபுணர்களும் இந்த புதிய சிகிச்சை முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
நரம்பியல் மற்றும் உளவியல் துறைகளின் இணைவு நோய் சிகிச்சை முறைமைகளில் புதிய பரிமாணத்தை வெளிப்படுத்தும் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலதிக விபரங்களுக்கு-
http://www.swissinfo.ch/eng/science_technology/New_light_on_how_mind_meets_brain.html?cid=30070010

No comments:

Post a Comment