Thursday, 28 April 2011

பாகிஸ்தானில் தொடர் தாக்குதல்: அதிர்ச்சியில் உறைந்த மக்கள்



நேற்று முன்தினம் பாகிஸ்தானில் ராணுவ பேருந்து ஒன்றை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர். இச்சம்பவத்தில் 6 பேர் பலியானார்கள்.இந்நிலையில் இன்று மேலும் ஒரு ராணுவ பேருந்தை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள துறைமுக நகரமான கராச்சியில் இருந்து ராணுவ அதிகாரிகளை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்தே இத்தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
அப்போது அந்த பேருந்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் பேருந்தில் இருந்த ராணுவ அதிகாரிகள் தூக்கி வீசப்பட்டனர். பேருந்தில் பயணம் செய்த ஏராளமான வீரர்கள் பலியாகி விட்டனர்.
அவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. 2 பேர் மட்டும் இறந்து இருப்பதாக முதல் கட்ட தகவலில் பொலிசார் தெரிவித்தனர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்களில் பலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் கராச்சி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கடந்த இரண்டு நாட்களில் ஏற்பட்ட மூன்றாவது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment