Sunday, 1 May 2011

10 ஆயிரம் ஊழியர்கள் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளனர்


சீனாவில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளனர் என்று சீன மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது.
சீனாவில் உள்ள சுப்ரீம் பீப்பிள்ஸ் புரோகியூரேடோரேட் என்றழைக்கப்படும் மக்கள் நீதிமன்றத்தை மேற்கோள்காட்டி சின்குவா இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதன் செய்தி தொடர்பாளர் பாய்குவனாமின் கூறியதாவது: சீனாவில் கடந்த மூன்று மாதங்களில் சுமார் 10 ஆயிரத்து 535 அரசு அதிகாரத்தை தவறாக உபயோகித்து வந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
மக்களிடமிருந்து அரசுக்கு தொடர்ந்து வந்த புகார்கள் அடிப்படையில் இவை கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில் 632 முன்னாள் அரசு அதிகாரிகளும் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.
இவர்கள் மீது மொத்தம் 5 ஆயிரத்து 567 வழக்குகள் பதிவாகியுள்ளது. 923 அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment