Sunday, 1 May 2011

இளவரசர் திருமணத்தில் கருப்பு இனத்தவர்கள் ஓரம் கட்டப்பட்டனர்: நடிகை பேட்டி



பிரிட்டிஷ் அரச குடும்பத் திருமணத்தில் கறுப்பு இனத்தவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளதாக பிரபல நடிகை ஷெரிஷெபர்ட் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.
தொலைக்காட்சிக் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற போதே அவர் அரச குடும்பத் திருமணத்தில் கறுப்பு இனத்தவர்கள் எங்கே என்ற கேள்வியை எழுப்பினார்.
வெஸ்ட்மினிஸ்டர் ஆலயத்தில் ஒரு பகுதியில் கறுப்பு இன முக்கியஸ்தர்கள் பலர் அமர்ந்து இருக்கின்றமை அவருக்குக் காட்டப்பட்டது.
ஆனால் அவர் அதில் திருப்தி அடையவில்லை. அதைப் பார்த்துவிட்டும் மீண்டும் எங்கே கறுப்பு இனத்தவர்கள் என்ற கேள்வியை எழுப்பினார்.
44 வயதான இந்த நடிகை மகாராணி எலிசபெத் திருமணத்தன்று அணிந்திருந்த ஆடையையும் விமர்சித்தார்.

No comments:

Post a Comment