Sunday, 1 May 2011

அமெரிக்காவில் இருந்து கனடாவுக்குள் ஊடுருவும் அயல்நாட்டவர்கள்



அமெரிக்காவில் இருந்து கனடாவில் முறைகேடாக அயல்நாட்டு நபர்கள் ஊடுருவுகிறார்கள் என விக்கிலீக்ஸ் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அரசியல்வாதிகள் நீண்டகாலமாக கொண்டுள்ள கருத்தின்படி கனடாவில் இருந்து தான் முறைகேடான குடியேற்றம் நடக்கிறது என கூறப்பட்டது.
ஆனால் முறைகேடான குடியேற்றம் அமெரிக்காவில் இருந்து கனடாவில் நிகழ்கிறது என வான்கூவரில் உள்ள அமெரிக்க தூதரகம் தகவல் அனுப்பியுள்ளது.
வான்கூவரில் உள்ள யு.எஸ் பிலிப் சிகோலோ வெள்ளை மாளிகைக்கு எழுதிய கடிதத்தில் அமெரிக்காவில் பல ஆண்டுகளாக வசித்தவர்கள் கனடாவில் ஊடுருவி தங்குவதற்கு சட்ட உரிமைக் கோருகிறார்கள் என தெரிவித்துள்ளது.
இத்தகவலானது 2010 ம் ஆண்டு பெப்பிரவரி 23ம் திகதி வான்கூவர் தூதரக அதிகாரி அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு எழுதிய கடிதத்தில் இத்தகவலை தெரிவித்துள்ளார். இக்கடிதத்தை விக்கிலீக்ஸ் இணையதளம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்கா மற்றும் கனடாவின் நிர்வாகத்தினர் நீண்டகாலம் எல்லைப் பகுதியில் உரிய பாதுகாப்பு இல்லை என ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள சைமன் பிரேசர் பல்கலைகழகத்தின் குடியேற்ற விவகாரம் மற்றும் பொருளாதாரத் துறை பேராசிரியராக உள்ள டான் டெவோர்ட்ஸ் கூறுகையில்,"முறைகேடாக கனடாவுக்குள் ஊடுருவ திட்டமிடும் நபர்கள் அமெரிக்காவை பயன்படுத்துகிறார்கள்" என தெரிவித்தார்.

No comments:

Post a Comment