Tuesday, 24 May 2011

அமெரிக்காவில் பயங்கர சூறாவளி: 89 பேர் பலி



அமெரிக்காவில் மிசெளரி மாகாணத்தில் உள்ள ஜோப்ளின் நகரில் ஏற்பட்ட கடும் புயல், சூறாவளிக்கு 89 பேர் பலியாகினர்.
இத்தகவலை மிசெளரியைச் சேர்ந்த உள்ளூர் ஊடகத்தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜோப்ளின் நகரத்தில் பரவலாக பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக ஜான் மில்லர் என்னும் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
கட்டடங்கள், கேஸ் நிரப்பும் நிலையங்கள், வால்மார்ட் உள்ளிட்ட கடைகள், வணிக வளாகங்கள் என்று நகரம் முழுவதும் முழுமையாக சேதமடைந்துள்ளது.
மின்சாரம் மற்றும் தொலைபேசி இணைப்புகளும் பாதிக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறியுள்ளார். இதனிடையே சூறாவளி பாதிப்புகள் மேலும் தொடரலாம் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து மிசெளரி மாகாணத்தில் ஆளுநர் ஜே நிக்ஸன் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். சூறாவளியில் உயிரிழந்தவர்களில் இதுவரை 50 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மேலும் இங்கு பல கட்டிடங்கள் சேதமைந்துள்ளதாகவும் இதில் சிலர் உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

No comments:

Post a Comment