Saturday 10 December 2011

தூக்கில் தொங்கிய நிலையில் காதலன்-காதலி உட்பட 3 சடலங்கள் மீட்பு!


எப்பாவல கடிகாவ பிரதேசத்தில் மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் மூன்று பேரின் சடலங்கள் இன்று சனிக்கிழமை(10.12.2011) காலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இரண்டு இளவயது பெண்களும் 27 வயதுடைய இளைஞன் ஒருவனதும் சடலங்கள் தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
உயிரிழந்துள்ள பெண்கள் இருவரும் சகோதரிகள் எனவும்15 வயது மற்றும் 17 வயதுடைய பெண்கள் எனவும் 17 வயதுடைய பெண்ணின் காதலனே உயிரிழந்த ஆண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தற்கொலையா அல்லது கொலையா என்பது இதுவரையில் உறுதி செய்யப்படாத நிலையில், எப்பாவெல பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment