தமிழ்த்திரையுலகில் முன்னணி நடிகையாக திகழும் திரிஷா விலங்குகளை நேசிக்கும் நபரையே திருமணம் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார். |
இந்திய மாநிலமான ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்தில் விலங்குகள் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் விழாவொன்று நிகழ்த்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட நடிகை திரிஷா பேசியதாவது, நாய்கள் மீதுள்ள அளவு கடந்த பிரியத்தால் அவற்றை எடுத்து வளர்த்து வருகிறேன். பணக்காரர்கள் வெளிநாட்டு நாய்களை வளர்க்கும் காலத்தில் நான் தெரு நாய்களை வளர்த்து வருகிறேன். ஏனென்றால் மற்றவர்களும் என்னைப் பார்த்து அவற்றை வளர்க்க முன்வர வேண்டும். மேடைகளில் விலங்குகளைப் பற்றி பேசுவதோடு மட்டும் நின்று விடாமல் அவற்றின் மீது அன்பு காட்ட வேண்டும். விலங்குகளின் மீது அன்பு காட்டக்கூடிய நபரை சந்தித்தால் அவரை திருமணம் செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். |
Wednesday 7 December 2011
விலங்குகளை நேசிப்பவரைத் தான் திருமணம் செய்து கொள்வேன்: நடிகை திரிஷா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment